மாணவியை காதலித்து கடத்தி..6 மாசம் ஆச்சு! இனி மீட்டு என்ன பிரயோஜனம்? காவல்துறையை விளாசிய நீதிபதிகள்
மதுரை: சிறுமிகள் காணாமல் போனதாக பெறப்படும் புகார்களில் போலீசாரின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான 32 வயது நபரால் கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை மீட்கக் கோரி சிறுமியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் தங்கள் குழந்தைகளை காணவில்லை அவர்களை மீட்க வேண்டுமென பானு, நாகலட்சுமி, முத்தாயி உள்ளிட்டோர் சென்னைஉயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மாயமான சிறுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது சிறுமிகளின் பெற்றோர் தரப்பில் 6 மாதம் கடந்தும் தனது மகளை மீட்கவில்லை என கூறப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், வழக்கு விசாரணை தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல் துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லையா? CELL PHONE TOWER SIGNAL மூலம் ஓடி போன மைனர் காதலர்களர்கள் எங்கு உள்ளனர் ? என கண்டறிந்து.தொடர்புடைய காவல் நிலையத்தில் கூறி அவர்களை கைது செய்ய முடியாதா?
ஓடிப்போன இளம் காதல் ஜோடிகள் குடும்பம் நடத்தி வந்த பிறகு, அவர்களை 6 மாதம் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதினால் என்ன பிரோயஜனம்? என கேள்வி எழுப்பினர். மேலும் சிறுமிகள் காணாமல் போன வழக்குகளில் முறையாக விசாரணை நடத்த வேண்டும். முறையாக விசாரணை நடத்தாவிடில் விசாரணை அதிகாரியையும் சேர்த்து வழக்குப்பதிய உத்தரவிட நேரிடும். காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த திருச்சி மண்டல ஐ.ஜி.க்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் காணாமல் போன சிறுமிகளை மீட்க வேண்டும்.
சிறுமிகள் மாயம் தொடர்பான வழக்குகளில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்களின் பாதுகாப்புக்காகத் தான் காவல்துறை உருவாக்கப்பட்டது.ஆனால், காவல் துறையின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை. தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் வளப்படுத்திக் கொள்ளவுமே முக்கியம் அளிப்பது போல் காவல் துறையின் செயல்பாடு உள்ளன.
சிறுமிகள் மாயமான அல்லது கடத்தப்பட்ட புகார் வந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் விசாரணை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். மாணவி மாயமான வழக்குகளில், விசாரணை அதிகாரி மாணவிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications