தமிழகத்தில் ஏன் கள் விற்கக் கூடாது? டாஸ்மாக்கில் மது விற்கிறீர்களே? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது? டாஸ்மாக் மூலம் ஈட்டும் வருவாயை கள் விற்பனையிலும் ஈட்டலாமே? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள்து. புதுச்சேரி, கேரளா மாநிலங்களில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்கிறது. தமிழ்நாட்டிலும் அனுமதித்தால் என்ன?' எனக் கேட்டுள்ளார் நீதியரசர் புகழேந்தி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை விவசாயி மணிகண்டன் என்பவரை, கள் இறக்குவதாக எஸ்.ஐ. இசக்கிராஜா சுட்டுப் பிடித்தது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மணிகண்டனின் தந்தை மனு அளித்திருந்தார்.

Toddy Madras High Court TASMAC

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் மணிகண்டனை ஆலங்குளம் எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் போலீசார், பனைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, மரத்தில் கட்டப்பட் டுள்ள பானைகளில் கள் உள்ளதா அல்லது பதநீர் உள்ளதா என சோதிக்க கட்டாயப்படுத்தினர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து எஸ்ஐ இசக்கிராஜா, மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்தால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை சம்பந்தப்பட்ட போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

விசாரணை அதிகாரியான சப்-கலெக்டர், சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நீதிபதி, அறிக்கையை படித்து பார்க்க கால அவகாசம் தேவை எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, SI இசக்கிராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் கோரப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிபதி. பிறப்பித்த உத்தரவில்," நாம் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கள் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கனிமம், டாஸ்மாக் உள்ளிட்டவைகளில் அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் ஈட்டுகிறது. கள் விற்பனையை அரசு ஏன் அனுமதிக்க கூடாது அரசு செயல் திட்டத்தை வகுத்து கல் விற்பனைக்கு அனுமதிக்கலாம். வருவாயும் கிடைக்கும். எனவே, இது குறித்து அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+