டெண்டர் கால அவகாசம் நீட்டிப்பு.. மதுரை எய்ம்ஸ் மருத்துவனை கட்டுமானம் குறித்து முக்கிய தகவல்! என்ன?
மதுரை: மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்கும் வகையிலான முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் மருத்துவமனை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

2019ல் ஜனவரி மாதம் 27-ந் தேதி அன்று மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு பணி என்பது தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காம்பவுண்ட் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்களுக்கும், திமுக எம்பிக்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் என்பது நடந்து வந்துள்ளது. இந்த வேளையில் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைப்பதில் தாமதம், தமிழக அரசு நிலம் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே பணி தொடங்கப்படாததற்கு முக்கிய காரணம் என மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் தான் மதுரை எய்ம்ஸ் பணிக்கான மதிப்பீடு என்பது ரூ.1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி கிடைக்கப்பட்டதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக 18ம் தேதி வரை ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதல் நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படலாம்.
மேலும் மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தமட்டில் 870 படுக்கைகள் இடம்பெற உள்ளது. மேலும் 30 படுக்கையுடன் கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்கான அறை, 150 எம்பிபிஎஸ் மாணவர்கள், செவிலியர்கள் படிக்கும் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகள், இயக்குனர்களுக்கான இல்லம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், வணிக வளாகம், ஆகியவை கட்டப்பட உள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் 33 மாதத்தில் முடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியை முடித்து 2026ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிபந்தனை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு முன்தகுதி விண்ணப்ப கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications