மதுரை சித்திரைத் திருவிழா 2026: வைகையாற்றில் இறங்குகிறார் கள்ளழகர்! பாதுகாப்பு பணியில் 2500 போலீஸார்
மதுரை: மதுரையின் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஏப்ரல் 27-ம் தேதி 10 நாள் திருவிழா கோலாகலமாகத் தொடங்குகிறது. விழாவிற்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அவர்கள் நேரில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

முக்கியத் திருவிழா தேதிகள்
ஏப்ரல் 26: மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்.
ஏப்ரல் 28: திருக்கல்யாண வைபவம்.
ஏப்ரல் 29: மாசி வீதிகளில் தேரோட்டம்.
ஏப்ரல் 30: கள்ளழகர் எதிர்சேவை.
மே 01: விழாவின் சிகர நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளல்.
பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு
கடந்த ஆண்டு 8 லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில், இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
போக்குவரத்து: பக்தர்களுக்காக 125 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சுகாதாரம்: 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகளும், 6 நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருப்பர்.
மருத்துவம்: 10 ஆம்புலன்ஸ்கள் மற்றும் போதிய மருத்துவ முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
பாதுகாப்பு: 15 எஸ்.பி-க்கள், 50 டி.எஸ்.பி-க்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்புகள்
மண்டகப்படிகள்: கள்ளழகர் எழுந்தருளும் 512 மண்டகப்படிகளுக்கும் உரிய பாதுகாப்புச் சான்றிதழ்கள் (தரம் மற்றும் மின்சார வசதி) கட்டாயம்.
அன்னதானம்: அன்னதானம் வழங்க விரும்புவோர் உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஆற்று பாதுகாப்பு: வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். மீட்புப் பணிகளுக்காக 50-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
நகரில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் கள்ளழகர் வரும் பாதைகளைச் சீரமைத்தல் போன்ற பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கமிஷனர் அபிஷேக் தீக்ஷித், கோயில் இணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications