Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் சந்தனக்கூடு கட்டுப்பாடுகளுக்கு எதிரான அப்பீல்.. அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை மறுத்துவிட்டது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க தர்கா தரப்பு முறையிட்டது. தர்கா மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 6 வரை கந்துாரி மற்றும் சந்தனக்கூடு விழாவை சிக்கந்தர் தர்கா நிர்வாகம் நடத்துகிறது. விலங்கு பலியிடுதல் மற்றும் அசைவ உணவு பரிமாறுதல் கந்துாரியின் ஒரு முக்கிய பகுதி. மலையில் கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.

Thiruparankundram high court

அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், தற்போதைய திருவிழா உரிமை பிரச்சனை, சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே சார்ந்தது. ஜனவரி 6ல் சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கந்துாரி மகா உற்சவத்திற்கு அனுமதி வழங்கப்படாது. ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கண்டிப்பாக பின்பற்றப்படும். விலங்கு பலியிடுதல், அசைவ உணவு தயாரித்தல் கூடாது எனத் தெரிவித்தார்.

தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "மலையில் கந்துாரி விழா நடத்தக்கூடாது. தரைப்பகுதியில் கந்துாரி நடத்தலாம். கந்துாரி என்ற வார்த்தைக்கு தடையில்லை" என்றார். அதற்கு நீதிபதி, "ஏற்கனவே இரு தரப்பின் உரிமைகள் பாதிக்கப்பட்டதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" எனல் கேள்வி எழுப்பினார். அதற்கு தர்கா தரப்பு வாஞ்சிநாதன், "அரசு எங்களை தான் ஒடுக்குகிறது. தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தான் கொடியேற்றப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரடில், உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை போலீசார் நிலைநாட்ட வேண்டும். கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் ஜனவரி 20 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வில் தர்கா தரப்பில் இன்று (ஜனவரி 5) வழக்கறிஞர் ஆஜராகி, சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரும் மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும், அந்த வழக்கிலும் தர்கா தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே தர்கா மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. அந்த உத்தரவுக்கு பின்னர் முறையீடு இருந்தால் முன்வைக்கலாம் எனத் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+