“இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.. தற்போது மோசமாகிவிட்டது” - மதுரை ஐகோர்ட் கிளை
மதுரை: பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு இந்து முன்னணி மோசமாகிவிட்டது என நீதிபதி கவலை தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பு அமர்ந்து சிலர் மது குடித்த வருவதாகவும், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பதாகவும் காவல்துறையினருக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆதிநாயகி என்கிற பெண் காவலர் சென்றிருக்கிறார். கோயிலின் முன்பு குடித்துக்கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து, பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

இது குறித்து பெண் காவலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், அநாகரீமாக நடந்துக்கொண்ட மூவரையும் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, வைத்து விசாரித்ததில் மூவரில் ஒருவர் இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருக்கின்றன. எனவே மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை சிறையில் அடைத்தது.
சிறையில் இருக்கும் குபேந்திரன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், "இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டது" என்று கூறி ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications