மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆபாசம்" உறவு கண்றாவி.. ரூமை சாத்திவிட்டு.. ஸ்டேஷனுக்குள்ளேயே.. அதுவும் அந்த காரணம் தான்.. ஹைலைட்

போலீஸ் ஸ்டேஷனில் அத்துமீறிய போலீஸ்கார ஜோடியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்

Google Oneindia Tamil News

மதுரை: காணாமல் போன ஃபைலை தேடுகிறோம் என்று சொல்லிவிட்டு, போலீஸ்கார ஜோடி ஒன்று, ஸ்டேஷனுக்குள்ளேயே உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை அழகர்கோயில் சாலையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வருகிறது.. இங்கு 4 நாளைக்கு முன்பு போலீசார் அனைவரும் ஒரு பாதுகாப்பு பணிக்காக வெளியில் சென்று விட்டனர்.

அப்போது ஸ்டேஷனுக்குள், எழுத்தர் ஒருவர் இருந்தாலும், டியூட்டியில் ஒரு பெண் போலீசும், முதுநிலை போலீஸ்காரர் ஒருவரும் இருந்துள்ளனர்..

 டாக்குமெண்ட்

டாக்குமெண்ட்

அப்போது ஸ்டேஷனுக்கு வெளிநபர் ஒருவர் வந்தார்.. அவரிடம், "சில முக்கியமான டாக்குமெண்ட்டுகளை காணோம்.. மேல் மாடியில் இருக்கிறதா என்று தேட வேண்டும்.. நாங்கள் போய் ஃபைல் தேடி எடுத்து வருகிறோம்.. நீ கீழே ஸ்டேஷனை கவனித்துக்கொள்" என்று சொல்லி, அந்த ஜோடி மாடிக்கு போய்விட்டது.. காவலுக்கு உட்கார வைத்துவிட்டு போய்விட்டதால், அந்த நபரும் கண்ணும் கருத்துமாக ஸ்டேஷனை விட்டு போகாமல் அங்கேயே உட்கார்ந்துள்ளார்.

 ஃபைல் எங்கே?

ஃபைல் எங்கே?

இந்த ஜோடி, மாடி அறைக்குபோய் கதவையும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு ஜாலியாக இருந்துள்ளது.. அந்த நேரம் பார்த்து, பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த ஒரு போலீஸ்காரர் ஸ்டேஷனுக்கு திடீரென திரும்பிவிட்டார்.. ஸ்டேஷனில் வெளிநபர் யாரோ உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு, "எங்கே யாரையும் காணோமே" என்று கேட்டுள்ளார்.. அதற்கு அவர், "ஏதோ, முக்கியமான டாக்குமென்ட் தொலைந்துவிட்டதாம்.. அதை தேடி எடுப்பதற்காக மாடிக்கு போயுள்ளனர்.. ஆனால் ரொம்ப நேரமாச்சு.. இன்னும் அவர்கள் கீழே இறங்கி வரவில்லை என்று சொல்லி உள்ளார்.

 ஜாலி ஜோடி

ஜாலி ஜோடி

இதை கேட்டு பெரிதாக ரியாக்ட் செய்யாத அந்த போலீஸ்காரர், தன்னுடைய யூனிபார்மை மாற்றுவதற்காக மாடிக்கு சென்றார்.. ஆனால், ரூம் கதவை பூட்டப்பட்டிருந்தது.. அதனால், கதவை தட்டிபார்த்தார். யாருமே திறக்கவில்லை.. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த போலீஸ்காரர், பின்பக்க ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார்.. அப்போது அந்த ஜோடி ஜாலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. 2 பேரையும் வெளியில் அழைத்து வந்து அந்த போலீஸ்காரர் சத்தம் போட்டார்.. கண்டித்தார்..

 டாக் ஜோடிகுமெண்ட்

டாக் ஜோடிகுமெண்ட்

அதற்குள் இந்த தகவல் சக போலீசாருக்கும் தெரிந்துவிட்டது.. இதனால், எசகுபிசகாக மாட்டிக் கொண்ட, அந்த ஜோடி என்ன செய்வதென்றே தெரியாமல் அசிங்கப்பட்டனர்.. பிறகு மெடிக்கல் லீவை போட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர்.. இதுகுறித்து உயர்நிலை அலுவலர்களுக்கு புகார் தரப்பட்டது.. அந்த புகாரின்பேரில் விசாரணைக்காக 2 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. உயரதிகாரிகள் அவர்களை இனி விசாரிப்பார் என்றும் தெரிகிறது.. ஆமா.. காணாமல் போன அந்த ஃபைல் எங்கே போயிருக்கும்?!

English summary
madurai incident by the policeman affair with woman police officer in the station போலீஸ் ஸ்டேஷனில் அத்துமீறிய போலீஸ்கார ஜோடியை விசாரணைக்கு அழைத்துள்ளனர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X