மதுரை மேலப்பாளையத்தில்...மனைவிக்கு சிலை..தொழிலதிபர் அசத்தல்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான சேதுராமன் தனது ஆசை மனைவி பிச்சைமணி அம்மாளுக்கு பைபர் மெட்டீரியலில் சிலை அமைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி சேதுராமன் மனைவி பிச்சைமணி அம்மாள் காலமானார். தனது ஆசை மனைவி தன்னை விட்டுச் சென்றாலும், தனது வீட்டில் அவரது உருவம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சேதுராமன் நினைத்தார். அதை செயலிலும் கொண்டு வந்தார். அவருக்காக சிலை வடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

Madurai Melapalayam business man made fibre statue for his wife

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அவர்களும் ஆலோசனை வழங்கினர். அதன்படி, பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 x 3 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் சிலையை வடிவமைத்தனர். இது நிரந்தரமாக இருக்கும் வகையில் சேதுராமன் வீட்டுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாட்கள் முடிந்த நிலையில், அவரது சிலைக்கு பூ போட்டு உறவினர்கள் வணங்கினர். திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினரும், மருத்துவருமான பி. சரவணனின் மாமியார்தான் பிச்சைமணி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மாமியாரின் சிலைக்கு இன்று சரவணனும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

முன்பு காலமானவர்களின் புகைப்படத்தை வணங்குவது வழக்கமாக இருந்தது. தற்போது, சிலை அமைத்து வழிபடுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவிலும் உயிரிழந்த தனது மனைவி மாதவிக்கு தொழிலதிபரும், அவரது கணவருமான ஸ்ரீநிவாஸ் குப்தா சிலை அமைத்து இருந்தார். இந்த சிலை சிலிகானால் அமைக்கப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+