மதுரை மேலப்பாளையத்தில்...மனைவிக்கு சிலை..தொழிலதிபர் அசத்தல்!!
மதுரை: மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான சேதுராமன் தனது ஆசை மனைவி பிச்சைமணி அம்மாளுக்கு பைபர் மெட்டீரியலில் சிலை அமைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி சேதுராமன் மனைவி பிச்சைமணி அம்மாள் காலமானார். தனது ஆசை மனைவி தன்னை விட்டுச் சென்றாலும், தனது வீட்டில் அவரது உருவம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சேதுராமன் நினைத்தார். அதை செயலிலும் கொண்டு வந்தார். அவருக்காக சிலை வடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார். அவர்களும் ஆலோசனை வழங்கினர். அதன்படி, பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 x 3 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் சிலையை வடிவமைத்தனர். இது நிரந்தரமாக இருக்கும் வகையில் சேதுராமன் வீட்டுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாட்கள் முடிந்த நிலையில், அவரது சிலைக்கு பூ போட்டு உறவினர்கள் வணங்கினர். திருப்பரங்குன்றம் சட்டசபை உறுப்பினரும், மருத்துவருமான பி. சரவணனின் மாமியார்தான் பிச்சைமணி அம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மாமியாரின் சிலைக்கு இன்று சரவணனும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முன்பு காலமானவர்களின் புகைப்படத்தை வணங்குவது வழக்கமாக இருந்தது. தற்போது, சிலை அமைத்து வழிபடுவது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவிலும் உயிரிழந்த தனது மனைவி மாதவிக்கு தொழிலதிபரும், அவரது கணவருமான ஸ்ரீநிவாஸ் குப்தா சிலை அமைத்து இருந்தார். இந்த சிலை சிலிகானால் அமைக்கப்பட்டு இருந்தது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications