இப்படியும் ஒரு போலீஸா.. இரவு நேரங்களில் வண்டிகளை நிறுத்தி.. மதுரையே ஹேப்பி அண்ணாச்சி!
மதுரை : மதுரையில் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பிஸ்கட், டீ வழங்கும் காவல் உதவி ஆணையருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Recommended Video
காவல்துறையினர் சோதனையை தவறாக புரிந்து கொண்டவர்களே அதிகம், காவல்துறை அதிகாரிகள் வாகனங்களை நிறுத்தினாலே, அது லஞ்சம் வாங்கத்தான் நிறுத்துகிறார்கள் எனற மனப்போக்கு மக்களிடம் அதிகமாக உள்ளது.
ஆனால் உண்மையில் காவலர்கள், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தடுப்பது, போதையில் வாகனத்தில் செல்வதை தடுப்பது. சிறுவர்களை வாகனம் ஓட்டவிடாமல் தடுப்பது. தலைகவசம் அணிய வலியுறுத்துவது போன்றவற்றைத்தான் செய்கிறார்கள். ஆனால் விதிகளை சுத்தமாக மதிக்காமல் போலீஸ் மீது பழிபோடுவது அதிகமாக இருக்கிறது.

டீ பிஸ்கெட் கொடுப்பார்
இந்நிலையில் மதுரை தல்லாகுளம் உதவி ஆணையர் சேகர் இரவு பணியின் போது நள்ளிரவில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து அவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து வழியனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

வாகனங்கள் நிறுத்தம்
அதே போல் நேற்று இரவு பணியின் போது உதவி ஆனையர் சேகர் , மதுரையின் கோரிப்பாளையம் பகுதியில் நள்ளிரவில் வரும் லாரி, வேன் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தினார்.

பாராட்டு
வாகன ஓட்டிகளை முகம் கழுவ செய்து பிஸ்கட், டீ, முக கவசம் கொடுத்து, தூக்கம் வந்தால் வாகனத்தை நிறுத்தி தூங்கி அதன் பின் செல்லவும் என்று அறிவுறுத்தினார். மேலும் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டி சென்றால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். இந்த காவல் அதிகாரியின் செயலை பார்த்த தன்னார்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

மதுரை ஹேப்பி
வாகன ஓட்டிகள் கூறும் போது கனரக வாகனங்களை ஓட்டி வந்தாலே போதும் வாகனத்தை நிறுத்தி லைசென்சை எடு, ஆர்சியை எடு என மிரட்டல் குரல், 500 ஐ கொடு, 1000 கொடு, அபராதம் போடனும் என மிரட்டி வரும் போலீசாருக்கு மத்தியில் முகம் கழுவ சொல்ல பிஸ்கட், டீ கொடுத்து அனுப்பி வைக்கும் இந்த போலீஸ் அதிகாரியை பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்றார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications