"சோர்ந்து போய் விட்டேன்".. நீட் தேர்வுக்கு தயாரான மதுரை மாணவி தற்கொலை.. பெரும் சோகம்
மதுரை: மதுரையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா தற்கொலை செய்து கொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவியின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் சார்பு ஆய்வாளராக இருந்து வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா (19). மருத்துவராகும் கனவுடன் இருந்த இந்த மாணவி கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு நடந்த தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார். இந்த நிலையில் நாளை அதாவது செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக ஜோதி துர்கா தயாராகி வந்தார்.

இதற்கு இரவு பகலாக படித்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தேர்வில் தான் தேர்ச்சி பெறுவேனா மாட்டேனா என பெற்றோரிடம் மாணவி வேதனையுடன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அறையில் படித்துக் கொண்டிருந்த ஜோதி துர்காவுக்கு தேனீர் கொடுக்க அவரது தாய் அறைக்கு சென்ற போது ஜோதி துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

ஏற்கெனவே அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன் விக்னேஷ் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் கிணற்றில் குதித்து கடந்த 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் மாணவச் செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications