Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வணக்கம்டா மாப்ள.. மதுரை டைடல் பார்க்ல இருந்து! மாஸாகப் போகுது மாட்டுத் தாவணி! ஒரே வருஷம் தான்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நீண்டநாள் கனவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி விரைவில் நிறைவேறப் போகிறது. சென்னை, கோவை, ஓசூர் போன்ற நகரங்கள் இதுவரை தகவல் தொழில்நுட்ப மையங்களாக வளர்ந்துள்ள நிலையில், தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரை இதுவரை அதே அளவில் வளர்ச்சி அடையவில்லை. இதனால், மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி சென்னை அல்லது பெங்களூருக்கு இடம் பெயர வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையை மாற்றும் வகையில், மதுரையில் டைடல் பார்க் (TIDEL Park) அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாட்டுத்தாவணியில் அமைக்கப்படும் இந்த டைடல் பார்க்கிற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். சுமார் 5.34 லட்சம் சதுர அடியில் தரைத்தளமும், 12 தளங்களும் கொண்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

இதற்காக சுமார் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி இன்ஜினியரிங் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது; ஆலோசகராக CPL நிறுவனம் பணியாற்றுகிறது. திட்டம் தொடங்கிய 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், 2026 ஜூன் மாதத்திற்குள் இந்த டைடல் பார்க் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madurai TIDEL Park Construction in Full Swing

மதுரை டைடல் பார்க்

மதுரை டைடல் பார்க், சென்னையில் உள்ள டைடல் பூங்காவைப் போல் நவீன வசதிகளுடன் உருவாகிறது. பார்க்கிங் வசதி தரைக்கு கீழே அமைக்கப்படும்; மாடி தோறும் ஆபீஸ் ஸ்பேஸ்கள், கூட்ட அறைகள், கேன்டீன்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகளுடன் ஏற்படுத்தப்படும். இந்தப் பூங்கா செயல்பாட்டுக்கு வந்தவுடன், 5,500க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஐடி துறையில் திறமையுள்ள இளைஞர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை தங்களது ஊரில் வேலை வாய்ப்புகள் இல்லாததால், பெரும்பாலும் அவர்கள் சென்னை அல்லது பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர். இதனால் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி மதுரை டைடல் பார்க் உருவாகிய பின், அந்த நிலை மாறும். இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே உயர்ந்த சம்பளமுள்ள ஐடி வேலைகளைப் பெற முடியும்.

ஐடி வேலைவாய்ப்பு

அதற்கேற்ப, மதுரையின் பொருளாதார வளர்ச்சி பெருகும். தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாது, அதனுடன் தொடர்புடைய பல தனியார் தொழில்கள், வணிகங்கள், வாடகை வீடுகள், உணவகங்கள், போக்குவரத்து சேவைகள் ஆகியவை வளர்ச்சியடையும். இது மதுரையின் முகத்தை முழுமையாக மாற்றும் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும் என அரசு நம்புகிறது.

தொழில்நுட்ப நகரம்

சென்னையில் தொடங்கி தற்போது கோவை, ஓசூர், தஞ்சை போன்ற இடங்களிலும் டைடல் பார்க் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வெற்றியைக் கண்காணித்து, தென் மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மதுரை டைடல் பார்க் திட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தப் பூங்கா செயல்பாட்டுக்கு வந்ததும், தென் தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய கதவுகள் திறக்கப்படும். "தூங்கா நகரம்" என அழைக்கப்படும் மதுரை இனி "தொழில்நுட்ப நகரம்" என பெயர் பெறும் நாள் தூரத்தில் இல்லை என்கின்றனர் மதுரை வாசிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+