மக்கள் காரி துப்பமாட்டார்களா? என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர்!
மதுரை: ''என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க'' என அரசு அதிகாரிகளை பொதுவெளியில் வைத்து அமைச்சர் மூர்த்தி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் பதவி வரும் போகும், ஆனால் அரசு அதிகாரிகளுக்கு அப்படியில்லை, ஓய்வு பெறும் காலம் வரை அவர்கள் எந்த ஊருக்கு மாற்றப்பட்டாலும் அவர்கள் அதிகாரிகள் தான். இதனால் தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளை முடிந்தவரை பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுரையில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் மூர்த்தி, பக்கத்தில் கலெக்டரை வைத்துக்கொண்டே, இப்படி புல்லும், புதரும் மண்டிக் கிடந்தால் மக்கள் காரி துப்ப மாட்டார்களா என அங்கிருந்த ஏ.இ.யிடம் எல்லோர் முன்னிலையிலும் கேட்டிருக்கிறார்.

அதேபோல் மின்வாரிய அதிகாரிகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ''ரேஷன் கடைக்கும், நூலகத்திற்கும் 2 நாட்களில் மின் இணைப்பு கொடுத்தாகணும், என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது, உங்க ஆட்களை வந்து பார்க்கச் சொல்லுங்க, என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க, எனக்கு என்ன செய்றதுனே தெரியல'' என தாம் வகிக்கும் அமைச்சர் பதவியை மறந்து மிரட்டல் தொணியில் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதை அமைச்சர்களுக்கு எத்தனையோ முறை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பொதுவெளிகளில் பேசும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும், வார்த்தைகளை கொட்டிவிடக் கூடாது என கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்திலும் சொல்லி வருகிறார். ஆனால் அவரது அறிவுரையை அமைச்சர்கள் கேட்டது போல் தெரியவில்லை.
மின் இணைப்பை 2 நாட்களில் கொடுத்துவிட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கறார் காட்டியதை யாரும் குறை சொல்ல முடியாது. மக்களுக்காக தான் அவர் இப்படி அதிகாரிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார். ஆனால் அதே வேளையில் ''என்னை பழைய மூர்த்தியாக மாத்திடாதீங்க'' எனச் சொன்னால் என்ன அர்த்தம் என்பது தான் இங்கே சர்ச்சையாகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications