தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை! வட மாநில வணிகர்கள் முறைகேடு -அமைச்சர் மூர்த்தி
மதுரை: தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தொழில் செய்யும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வேதனைத் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

வணிகர் சங்க பேரமைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என்ற தகவலை வெளியிட்டார். வணிகர்கள் இப்படி வரி செலுத்தாமல் இருந்தால் தமிழகம் எப்படி வளர்ச்சி அடையும் என வேதனை தெரிவித்த அவர் வட மாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

துணை நிற்போம்
தமிழக வணிகர்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்றும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்களை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த இங்குள்ள வணிகர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, வணிகர்கள் சரியாக வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் எனக் கூறினார். வணிகர் நல வாரியத்தில் புதிதாக ஐம்பதாயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறிய அவர் அந்த வாரியத்தின் மூலம் நலிந்த வணிகர்களுக்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அரிசிக்கு ஜி.எஸ்.டி.
இதனிடையே அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதை கண்டித்து வரும் 22-ஆம் தேதி சென்னையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மூர்த்தி
வணிகர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வணிகர்கள் 3 லட்சம் பேர் வரி செலுத்தவில்லை என அவர்களை பற்றியே அந்த விழா மேடையில் அமைச்சர் மூர்த்தி பேசியிருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications