Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு வைக்கவில்லை.. மதுரை ஷாக்!

2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது.. அத்துடன் தங்கள் வீட்டு நாயையும் விட்டு வைக்காமல், அதற்கும் விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் நிலைகுலைய வைத்து வருகிறது!

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் அருண்.. இவரது மனைவி பெயர் வளர்மதி.. அகீதா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இவர்களுக்கு உள்ளனர்.

இந்நிலையில், அருணுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.. சிகிச்சை தந்தும் காப்பாற்ற முடியாத சூழலில் 5 மாசத்துக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.

 அருண்

அருண்

இதனால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய்விட்டது.. வளர்மதியும், 2 பெண்களும், அவர்களின் சொந்தக்காரர் ஆதரவில்தான் வளர்ந்து வந்தனர்.. ஆனால், அருண் குடும்பத்துக்கு ஏற்கனவே கடன் பிரச்சனை இருக்கிறது.. அருண் இறந்ததும், அந்த கடனை அடைக்க முடியாமல் வளர்மதி படாத பாடு பட்டு வந்தார்.

 கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

ஒருபக்கம் கணவனின் இறப்பு, இன்னொரு பக்கம் கடன் பிரச்சனை என சிக்கி தவித்து வந்த நிலையில், கடைசியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.. அதை மகள்களிடம் சொல்லவும், அவர்களும் மரணத்துக்கு தயாரானார்கள்.. முன்னதாக, தன் வீட்டில் இருந்த தம்பி மகள் மேகலா என்ற சிறுமியை, கீழ் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் வளர்மதி. அதன்பிறகு தாங்கள் செல்லமாக வளர்த்த நாய்க்கு சாப்பாட்டில் விஷம் வைத்தனர்.. அந்த நாய் காஸ்ட்லி நாயாம்.. சாப்பாட்டை சாப்பிட்டதுமே, அது பரிதாபமாக சுருண்டு விழுந்து இறந்துவிட்டது.

 மகள்கள்

மகள்கள்

பிறகு தங்களது குடும்ப போட்டோவை எடுத்து வைத்து கொண்டு, தாயும், 2 மகள்களும் பார்த்து பார்த்து கதறி அழுதனர்.. இறுதியில், அந்த போட்டோவுக்கு தாங்களே பூ வைத்து வழிபாடு செய்து இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.. இதையடுத்து, கை நரம்புகளை பிளேடால் 3 பேரும் வெட்டிக் கொண்டனர்.. ஆனால் ரத்தம் தான் கொட்டியதே தவிர, ஒருத்தர் உயிரும் போகவில்லை.. எனவே, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, ஒரே கம்பியில் 3 புடவைகளை மாட்டினர்.. அதில் ஆளுக்கொரு புடவையில் 3 பேரும் ஒரே நேரத்தில் தூக்கு மாட்டி தொங்கிவிட்டனர்.

 வளர்ப்பு மகள்

வளர்ப்பு மகள்

இதன்பிறகுதான் போலீசுக்கு விஷயம் தெரிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது ஒரு கடிதம் எழுதி உள்ளார் வளர்மதி.. அதில், கணவனின் மறைவு தங்களை அளவுக்கு அதிகமாக பாதித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.. மேலும் வளர்ப்பு மகளான அந்த சிறுமியை கொல்ல தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அதற்கு மனசும் வரவில்லை என்றும் , அதனால்தான் தற்கொலைக்கு முன்பு, அந்த குழந்தையை மட்டும் கீழ் வீட்டில் தூங்க வைத்து விட்டு வந்ததாகவும் எழுதியிருந்தார்.

 உருக்கம்

உருக்கம்


அதுமட்டுமல்ல, தங்களின் சொத்துக்களை வைத்து அந்த சிறுமியை பாதுகாக்குமாறும் அந்த கடிதத்தில் உருக்கமாக வளர்மதி தெரிவித்திருக்கிறார். இந்த தற்கொலை விஷயம் கேள்விப்பட்டவுடனேயே மதுரை மாவட்ட எஸ்பி சுஜித் குமார் நேரில் வந்து விசாரணையை நடத்தினார். ஒத்தக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தற்கொலை சம்பவத்தினால் மதுரையே உறைந்து போய் கிடக்கிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+