கட்டும் போதே சரிந்து விழுந்த மதுரை மேம்பாலம்.. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிரடி ஆக்ஷன்
மதுரை: மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
Recommended Video
மதுரை நத்தம் சாலையில் மதுரை செட்டிகுளம் இடையே பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி ஊழியர்கள் அங்கு வழக்கம் போலக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மதுரை
அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்தார்.

மோசமான விபத்து
Hydraulic பணிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதலில் கூறப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் மேம்பாலத்தில் அருகே தொழிலாளிகள், அல்லது பொதுமக்கள் யாரும் இல்லை. இல்லையென்றால் இந்த மோசமான விபத்தால் உயிரிழப்பு அதிகரித்து இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலம், கட்டும்போதே, இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அபராதம்
இது எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா அல்லது மோசமான கட்டுமான பொருட்களால் ஏற்பட்ட விபத்தா என்ற சந்தேகங்களும் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இது தொடர்பாகத் தேசிய நெடுஞ்சாலைத்துறையும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், மதுரையில் மேம்பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது தொடர்பாகக் கட்டுமான நிறுவனத்துக்கு ₹3 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டுமான பணிகள்
மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதி உடன் இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்ட போது தான் விபத்து நிகழ்ந்தது
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications