Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை, தேனியில் செல்போன், பிரியாணி கடைகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மற்றும் தேனியில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என்.ஐ.ஏ) அதிரடி சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்தவர் அப்துல்லா. இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் மதுரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

NIA Teams Conduct Raids in Madurai, Theni Dists

கைது செய்யப்பட்ட அப்துல்லாவுக்கு தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து அப்துல்லாவின் வழக்கை என்.ஐ.ஏ.வசம் மதுரை போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் மதுரை புதூரில் அப்துல்லா வீட்டில் அதிகாலை 5 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

NIA Teams Conduct Raids in Madurai, Theni Dists

மதுரையைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறி சின்னமனூரில் பிரியாணி மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவர் தடைசெய்யப்பட்ட அல்-உம்மா அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை 5 மணியளவில் இருந்து சின்னமனூர் தேரடி பகுதியில் உள்ள அவரது கடை மற்றும் சில பகுதிகளில் தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+