MK Stalin Gram Sabha Meeting: ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்- ஓபிஎஸ்
Recommended Video

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் அவர்கள் அரசியல் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து 17 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்தினார். 27 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் ஒரு உரிமையை தமிழக மக்கள் அதிமுக விற்கு கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே கிராம சபைக் கூட்டம் அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் குடிதண்ணீர், சாக்கடை பிரச்சனை என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து சரி செய்து கொடுத்து வருகின்றனர்.
ஸ்டாலினின் கிராமசபை கூட்டம் என்பது கண்துடைப்பு நாடகம்.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் சரி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கிராம சபை கூட்டத்தை நடத்தவில்லை தற்போது தேர்தலில் நோக்கத்தை வைத்துதான் கிராம சபை கூட்டத்தை வைத்து நாடகம் நடத்தி வருகிறார் என்றார் ஓபிஎஸ்.












Click it and Unblock the Notifications