தமிழக ரயில்வேயில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்த தடைக்கோரி வழக்கு.. தென்னக ரயில்வேக்கு நோட்டீஸ்
மதுரை: தமிழகத்தில் ரயில்வே பணிகளில் ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்த தடை கோரிய வழக்கில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணவாளன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மதுரை- கள்ளிக்குடி -திருமங்கலம் ரயில்வே பாதையில் கடந்த 8ம் தேதி நிகழவிருந்த விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இந்த நிகழ்வு ரயில்வேயில் சில மாறுதல்களை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் தேர்ச்சி பெறுகின்றனர்.
தமிழகத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களில் 15சதவீதம் முதல் 20 சதவீத ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாகவே உள்ளனர். குறிப்பாக ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய பணிகளில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தமிழ்மொழி தெரிவது இல்லை,
கள்ளிக்குடி விபத்து ஏற்படும் சூழலுக்கு முக்கிய காரணமாக அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னையே காரணமாக கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் ஸ்டேசன் மாஸ்டர், லோகோ பைலட் உள்ளிட்ட முக்கிய ரயில்வே பணிகளில் தமிழ்மொழி தெரிந்தவர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என தென்னக ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு தண்டபாணி ஆகியோர் அமர்வு விசாரித்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கை ஜுன் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications