இயக்குநர் ரஞ்சித்தை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை கோரிய மனு.. ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரை கிளை
மதுரை: திரைப்பட இயக்குநர் ரஞ்சித் குறித்து, மிகவும் தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய அம்பி வெங்கடேசன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கினை, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது
தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி இயக்குநர் ரஞ்சித் தொடர்ந்த வழக்கோடு சேர்த்து, அம்பி வெங்கடேசனுக்கு எதிரான வழக்கையும் பட்டியலிடவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

மதுரை கொடிக்குளம் மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த வீரன் என்ற விடுதலை வீரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அம்பி வெங்கடேசனுக்கு எதிரான மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் ரஞ்சித் சர்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சோழநாட்டு வேளாளர் சங்கத்தை சேர்ந்த அம்பி வெங்கடேசன் என்பவர், இயக்குநர் ரஞ்சித்தை மிகவும் தரக்குறைவாக பேசி உள்ளார். மேலும் அவர் சார்ந்த சமூகத்தை கூறி,மிகவும் இழிவாக பேசி உள்ளார். அம்பி வெங்கடேசனின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது
சக்கிலியர், பள்ளர், என்கிற சாதி பெயர்களை அருந்ததியர், தேவேந்திர குல வேளாளர் என அழைக்க வேண்டும் என அரசாணை உள்ளது.
ஆனால், அம்பி வெங்கடேசன் என்பவர், இரு தரப்பினருக்கு இடையே விரோதம் விளைவிக்கும் வகையில் பேசி உள்ளார்.
எனவே அம்பி வெங்கடேசன் மீது SC/ST பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இது குறித்து நடவடிக்கை கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அருந்ததியர் சமூகத்தைப் பற்றியும், இயக்குநர் ரஞ்சித் குறித்தும் அவதூறாக பேசிய அம்பி வெங்கடேசன் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என விடுதலை வீரன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு தன் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் பா.ரஞ்சித் தாக்கல் செய்துள்ள வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications