அடமானத்தில் 300 பவுன் நகை மோசடி: மதுரையில் தேடப்பட்டவரின் அம்மா! பொங்கல் பரிசு பெற வந்தபோது ட்விஸ்ட்
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது... அங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பழைய மோசடி விவகாரம் வெடித்து கிளம்பி, அந்தப் பகுதி முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.... அது என்ன தெரியுமா?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது இரும்பாடி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம்.. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் நகை அடகுக் கடை நடத்தி வந்தார்.

300 சவரன் தங்க நகை
"நம்பிக்கையானவர், ஊருக்கே தெரிந்த முகம்" என்ற பெயரில், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் என பலரும் அவரிடம் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றனர். பலர் ஜீவானந்தமிடம் மாதம் மாதம் சீட்டு கட்டியும் வந்தனர்.
ஆனால், 2017ம் ஆண்டு, யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல், ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.. அதாவது பொதுமக்களின் ஏலச்சீட்டு பணம் மற்றும் சுமார் 300 பவுன் நகைகளுடன் திடீரென தலைமறைவாகிவிட்டார்.. இதனால் இரும்பாடி கிராம மக்களே கடும் அதிர்ச்சி அடைந்தனர்..
பொங்கல் பரிசுத் தொகுப்பு
அதன்பின் ஜீவானந்தத்தை பல வழிகளில் தேடினார்கள்,.. ஆனால் அவரை பற்றின எந்த தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை... தங்கள் பகுதியிலேயே குடியிருக்கிறார் என்பதால் நகையும் பணமும் தந்தோமே? என்று கதறி புலம்பினார்கள்... எங்கு போய் அவரை தேடுவது என்றும் தெரியாமல், மனவேதனையுடன் அப்படியே இந்த மோசடி சம்பவத்தையும் விட்டுவிட்டார்கள்... ஆனால் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மட்டும் இரும்பாடி கிராம மக்களுக்கு போகவில்லை.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ரூ.3 ஆயிரம் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது... அந்தவகையில் இரும்பாடி கிராம ரேஷன் கடையிலும் நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.
ஜானகியை சுற்றி வளைத்த மக்கள்
அப்போது, திடீரென ஜீவானந்தத்தின் தாயார் ஜானகி (75), காரில் வந்து இறங்கினார்.. பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க ரேஷன் கடைக்கு வந்திருந்தார்.. உடனே அவரை அடையாளம் கண்ட சில பெண்கள், "இவர் ஜீவானந்தத்தின் அம்மா" என்று சத்தமாக சொன்னார்கள்.. இதனால் நகை, சீட்டு பணத்தை இழந்த பொதுமக்கள் அனைவருமே ஒன்றாக திரண்டுவிட்டனர்...
ஜானகியைச் சுற்றிவளைத்து பிடித்தனர். "எங்கள் நகை எங்கே?", "உன் மகன் எங்கே?" எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.. இதனால் அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.. அதற்குள் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நகை கிடைத்தாக வேண்டும்
சோழவந்தான் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஜானகியை பத்திரமாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறாரகள்.. ஆனால், எக்காரணம் கொண்டும் ஜானகி அம்மாவை விடுவிக்கக்கூடாது, ஜீவானந்தம் வந்தே ஆகவேண்டும், தங்களுடைய பணம், நகை திரும்ப கிடைத்தே ஆக வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
அவர்களை சமாதானம் செய்த போலீசார், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி தந்தனர்.. பொங்கல் தொகுப்பை வாங்க வந்த அம்மா, இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லையாம்...!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications