இன்று இரவு சென்னை வருகை.. நாளை திருப்பரங்குன்றம் செல்லும் பிரதமர் மோடி.. பயண விவரம் முழு விவரம்
மதுரை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையல் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். இன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர் மோடி, நாளை காலை புதுச்சேரி செல்கிறார். அதன்பிறகு அங்கிருந்து தஞ்சை வழியாக மதுரை செல்கிறார். மதுரையில் நாளை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் மாலையில் மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தற்போது இரண்டாம் கட்டமாக வருகிற 1ம் தேதி புதுச்சேரி, மதுரை என இரண்டு இடங்களில் நடைபெற போகிறது. இதில் பிரதமர் மோடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் பங்கேற்க போகிறார்கள். இதற்காக இன்று இரவு டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வருகிறார். கிண்டி ராஜ்பவனில் இன்று இரவு பிரதமர் மோடி தங்குகிறார்.

பின்னர் நாளை காலையில் புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அதனை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஒய்வெடுக்கும் பிரதமர், பின்னர் சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வரவேற்பிற்கு பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வான கட்டுபபாட்டு கோபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் காணொலி காட்சி வாயிலாக மதுரையில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார். அதேபோல் ராமேஸ்வரம் செல்லும் சாலையான பரமக்குடி -ராமநாதபுரம் சாலையை நான்குவழிச்சாலையாக மாற்றுவது உள்பட பல்வேறு மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் மாலை 4 மணி அளவில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் செல்கிறார். அங்கு முருக பெருமான தரிசனம் செய்யும் பிரதமர் மோடிக்கு கும்பம் மரியாதை கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு மாலை 4.30 மணி அளவில் மதுரை மண்டேலா நகர் சுற்றுசாலை பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்படபல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி, பிரதமர் மோடி செல்லும் திருப்பங்குன்றம் கோவில் உள்பட பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எல்லைக்குள் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆள் இல்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடைவிதிக்கப்படடுள்ளது. மீறி ட்ரோனை பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications