பலாத்காரம், 6 முறை கருக்கலைப்பு..விஜயலட்சுமி வழக்கில் நீதிபதி கருத்து- சீமான் 'அசால்ட்' பதில்!
மதுரை: நடிகை விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பலாத்காரம் செய்தார், மிரட்டல் விடுத்தார், புகார்களை வாபஸ் பெற்றார் என்கிற நீதிபதியின் கருத்துகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதிலளித்துள்ளார். மேலும் விசாரணை முடிவு வரட்டும்.. பொறுத்திருங்கள் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான நடிகை விஜயலட்சுமியின் வழக்கு படுதீவிரம் அடைந்துள்ளது. தம் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

அப்போது, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு சீமானை நடிகை விஜயலட்சுமி அணுகி இருக்கிறார்; அப்போது விஜயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து உறவு வைத்திருந்தார் சீமான். ஆனால் சீமான், திருமணம் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமான் மீது விஜயலட்சுமிக்கு எந்த ஒரு காதலும் இல்லை. 2008-ம் ஆண்டே இருவரும் மதுரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் வற்புறுத்தியதால் 6 முறை தாம் கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் சீமான் பெருந்தொகையான பணத்தை மோசடி செய்துவிட்டார் எனவும் நடிகை விஜயலட்சுமி கூறியிருக்கிறார். விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதனால் சீமான் மீதான புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றார். ஆனால் இந்த பலாத்கார புகார் தீவிரமானது; ஆகையால் சீமான் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சீமான் மீதான புகாரை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்க வேண்டும்; 12 வாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி இளந்திரையன் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், நாம் தமிழர் கட்சியினர் மிரட்டியதால் புகார்களை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி சொல்லவில்லை. நீதிபதிதான் அப்படி சொல்லி இருக்கிறார். விசாரணை இருக்கிறது அல்லவா? விசாரிக்கனும் இல்லையா? விசாரணை முடிவடையட்டும். பொறுத்திருங்க.. அதுக்குள்ள அவசரப்படாதீங்க.. இவ்வாறு சீமான் கூறினார்.
-
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications