நாட்டையே விற்றுவிடுவார்கள் போல.. மதுரை ரயில்வே மைதானத்தை தாரைவார்க்க சாலமன் பாப்பையா கடும் எதிர்ப்பு
மதுரை: மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா கையெழுத்திட்டிருக்கிறார். இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது" என்று சாலமன் பாப்பையா கூறினார்.
மதுரை அரசரடியில் ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை கடந்த வாரம் துவங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 1600 கோடிக்கும் அதிகமாகும். இந்த மைதானம் மதுரையைச் சேர்ந்த பல்லாயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கி உள்ளது. இந்த மைதானத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ரயில்வே காலனி பகுதியில் 1550 மரங்கள் உள்ளன. மதுரை மாநகராட்சி முழுவதும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை விட ரயில்வே காலணி பகுதியில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் ஆகும்..
மதுரை மக்களுக்கு சுவாசிக்க தகுந்த சுத்தமான காற்றையும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இந்த மைதானம் மற்றும் மரங்கள் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதனால் தான் இந்த இடத்தை மதுரையின் நுரையீரல் என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட ஒரு இடத்தை தற்போது தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது என்பது மதுரைக்கே மிகப்பெரும் தீங்கிழைக்கும் செயலாகும். இதனை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்குகிறோம்" இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.
இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதுரையைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மதுரையில் வசிக்கும் மக்களிடம் கையெழுத்து பெறும் முயற்சியில் இடதுசாரிகள் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்தவரும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும் முன்னாள் தமிழ் பேராசிரியரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா, மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் எம்.பி சு. வெங்கடேசன். அதில் தனது கையெழுத்தை பதிவு செய்து, தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறி இருப்பதாவது: "மதுரை ரயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். என்னால் அங்கு போக முடியவில்லை என்றாலும், தற்போது முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதை நான் பார்க்கிறேன்.
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன்பாப்பையா கையெழுத்திட்டார்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 15, 2023
“இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிறபோக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது” என்று கூறினார். 1/2 pic.twitter.com/iSuhtOpvQZ
இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தை தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று ஓடவும், விளையாடவும், நடக்கவும் மைதானம் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications