மதுரை அருகே பரபரப்பு.. மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து ஊழியர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து ஊழியர்-வீடியோ

    மதுரை: மதுரை புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஊழியர் ஒருவா் 70 அடி மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் பாலசுப்பிரமணியம். இங்கு இவர் 10 வருடமாக பணி புரிந்து வருகிறார்.

    State transport employee who tried to commit suicide by climbing to the tower in Madurai

    இவருக்கு காலில் அடிபட்டதால் பொது மேலாளர் அனுமதியுடன் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். இந்நிலையில் அவருக்கு டெப்போ அதிகாரிகள் மருத்துவ விடுப்பு அளிக்காமல் சம்பளத்தை பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணியம், அங்குள்ள 70 அடி மின்விளக்கு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். சுமார் ஒரு மணி நேரமாக மின் கோபுரத்தில் இருந்து இறங்க மறுத்த அவரிடம் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும்அரசு போக்குவரத்து கழக கிழக்கு மண்டல மேலாளர் நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சமாதானமடைந்த பாலசுப்பிரமணியத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக கீழே இறக்கினார்கள். அவரது சம்பள பிடித்தம் குறித்து உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சக ஊழியர்கள் கூறுகையில், டெப்போவில் அரசியல் ரீதியாக வீரபத்திரன் என்பவர் மற்ற ஊழியர்களை பழிவாங்குவதாக கூறினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+