மதுரையில் நீதிபதியிடமே மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக புகாரால் திருப்பம்.. பேராசிரியர், மாணவர் கைது
மதுரை: மதுரையில் நீதிபதியிடமே மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது . கல்லூரியில் ஆசிரியைகள் உள்பட 15 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் பேராசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவர் ஒருவரும் சிக்கினார். 2 பேராசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் மதுரை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவிக்கு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஜெகன் கருப்பையா (வயது 42) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.
மேலும் மதுரை மகிளா கோர்ட்டில் நீதிபதியிடம் அந்த மாணவி புகார் அளித்தார். இந்த புகாரை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் செக்கானூரணி போலீசார் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்.
செக்கானூரணி போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அங்கு பணிபுரியும் 3 பேராசிரியைகள், மாணவிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் போலீசாரை தேடி வந்து, தாமாக முன்வந்து, ஜெகன் கருப்பையா உள்பட சில பேராசிரியர்கள் மீது பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். அப்போது மாணவர் ஒருவர் மீதும் புகார் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் பேராசிரியர் ஜெகன் கருப்பையா மற்றும் மாணவர் ஒருவரை கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் பேராசிரியர்கள் ஞானசேகர், ஸ்டாலின் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலியல் சம்பவம் தொடர்பாக பேராசிரியைகள், மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தொடர்பாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications