Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டை போட்டுப் பார்க்கிறீங்களா? ராமரையே கைவிட்ட உங்களுக்கு நாங்க எம்மாத்திரம்? சு.வெ கொதிப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்நாட்டை "போட்டுப் பார்க்கிற" வேலையை வெளிப்படையாகவே செய்கிறார்கள், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்துள்ளனர் என கொந்தளித்துப் பேசியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 அன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி அறிவித்துள்ளார்.

budget 2024 su venkatesan bjp

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு இஉள்ளது என கடுமையாக விமர்சனம் செய்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது திமுக.

இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் நாற்காலிக்கான பட்ஜெட்டாக உள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் பீகாருக்கு மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் சந்தர்ப்பவாத பட்ஜெட்டாக உள்ளது.

பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மிக மிக குறைவு. அதுவேதான் இந்த பட்ஜெட்டிலும் தொடர்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மிகக் கொடுமையாக வஞ்சிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. மதுரை மெட்ரோ, கோவை மெட்ரோ, மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. உட்கட்டமைப்பில் தமிழ்நாட்டை போட்டுப் பார்க்கிற வேலையை வெளிப்படையாகச் செய்கிறார்கள். ஒட்டு விழவில்லை என்பதால் ராமரையே பாஜக கைவிட்டது, அவர்கள் தமிழ்நாட்டை கைவிட்டதைப் பற்றி பெரிய ஆச்சர்யம் இல்லை.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதிகளை மத்திய அரசு தர மறுக்கிறது. பீகாரில் உள்ள கோசி நதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக 21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. மாநிலங்களை பழி வாங்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளையோடு பட்ஜெட் மீதான விவாதம் முடிகிறது. ஆனால் இன்று வரை ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புக் ( Pink Book ) வெளியிடப்படவில்லை . 2017-ல் ரயில்வே பட்ஜெட்டை பாஜக அரசு நிறுத்தியது. இப்பொழுது ஆவணங்களை வெளியிடும் முறையையும் ஒழிக்கிறார்கள். ரயில்வேயில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் ரயில்வே வரலாற்றில் இல்லாத அளவிற்கு விபத்துக்கள் நடந்துள்ளன.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரயில் மறியல் நடத்தப்பட உள்ளது. இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும், பட்ஜெட்டை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பேசி வருகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றம் ஒரு போராட்ட களமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+