கள்ளச்சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம்.. என் மகனுக்கு இரங்கல் கூட இல்லை.. மாடுபிடி வீரரின் தாய் வேதனை!
மதுரை: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த தன் மகன் நவீன் குமாருக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவரின் தாய் மற்றும் சகோதரி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல் மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை நவீன் குமார் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம், மொத்தமாக 11 சுற்றுகள் நடைபெற்றன. இதில் 10வது சுற்றின் போது மதுரை விளாங்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான நவீன்குமார் களமிறங்கி இருந்தார். இவர் மாடுபிடிக்க முயன்ற போது, ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மார்பு, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

இதன்பின் உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நவீன் குமார் உயிரிழந்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இளைஞர் உயிரிழந்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதன்பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நவீன் குமாரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினரும், உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நவீன் குமார் தாய் மற்றும் சகோதரி இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது ஒரே மகன் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை பாதுகாத்து வந்தான்.
ஜல்லிக்கட்டு விளையாட சென்று இன்று எங்களுடன் இல்லை. அரசு சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த என் மகனுக்கு, மாவட்ட ஆட்சியோ, மாநகராட்சி ஆணையோ ஒரு இரங்கல் கூட கூறவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடி உயிரிழந்தால், அரசு தரப்பில் இரங்கல் கூட தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது.
எங்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் அல்லது அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரில் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் கூறி இருப்பதால், சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications