அதிமுக மாநாட்டின் கிளைமேக்ஸ் மாலை தான்! அப்ப பொழுதுக்கும் என்னென்ன நிகழ்ச்சிகள் தெரியுமா?
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டின் கிளைமேக்ஸே இன்று மாலை தான் நிகழவுள்ளது. அப்ப நாள் முழுவதும் மாநாட்டுத் திடலில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கும் என்ற கேள்வி எழலாம்.
காலை 8.30 மணியளவில் அதிமுக மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

பின்னர் 600 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த அதிமுக ஆட்சிக்கால சாதனைகளின் கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன்பிறகு விடுதிக்கு திரும்பிவிட்டார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டு மேடைக்கு கீழ் அமர்ந்துவிட்டனர்.
செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியின் நாட்டுப்புற பாடல் கச்சேரி, திண்டுக்கல் கென்னடி குழுவின் ஆர்கெஸ்ட்ரா, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சாப்பிட்டுவிட்டு தொண்டர்கள் தூங்காமல் இருக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பின்னர் மாலை 4 மணியளவில் மாநாட்டின் கிளைமேக்ஸ் ஆரம்பமாகிறது. விடுதியிலிருந்து மாநாட்டு மேடைக்கு மாலை வரும் எடப்பாடி பழனிசாமி தனது நிறைவுரையை ஆற்றவுள்ளார். அந்த உரையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
வெளியூர்களில் இருந்து வந்திருப்போர் இரவு சீக்கிரமே ஊர் திரும்பும் வகையில் 8 மணிக்கு முன்னதாக மாநாட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இப்போதே மதுரை புறநகர்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications