ஆடி அசைஞ்சு வந்த ஆபிசர்ஸ்.. டென்சனான மதுரை கலெக்டர் .. மறக்க முடியாத தண்டனை கொடுத்து அதிரடி
மதுரை: மதுரை கலெக்டர் ஆபிஸுக்கு காலை 9.30 மணிக்கு மேல் தாமதமாக வந்த அரசு அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக தமிழ்நாடு முழுவதுமே திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் எந்த பிரச்சனை என்றாலும் ஆட்சியரை சந்தித்து சமானியர்கள் புகார் அளிக்க முடியும். அந்த வகையில் துறை வாரியாக சரிசெய்யப்படாத பிரச்சனைகளை அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து பிரச்சனைகளை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிடுவார். விவசாயிகள் குறைதீர் கூட்டமும் இதேபோல் தான் மாவட்டங்களில் ஏதோவது ஒரு திங்கள்கிழமை நடைபெறும். இதனால் எப்போதுமே மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் திங்கள் அன்று பரபரப்பாக காணப்படும்.

போலீஸ் ஸ்டேசன்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சனைகள், ஆர்டிஒ அலுவலகங்களில் தீர்க்கப்படாத பிரச்சனை நிலம் சம்பந்தமான பிரச்சனை, முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, விவசாயிகள் உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ஆக்கிரமிப்பு பிரச்சனை, சாலை பிரச்சனை, புதிய கோரிக்கைகள் என பல்வேறு விஷயங்களுக்காக மாவட்ட ஆட்சியரை மக்கள் சந்தித்து குறைகளை தெரிவிப்பார்கள்.
இந்நிலையில் அப்படித்தான் திங்கள்கிழமையான இன்று மதுரையில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இந்நிலையில் கலெக்டர் ஆபிஸ்க்கு காலை 9.30 மணிக்கு மேல் வந்த அரசு அதிகாரிகளை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியே நிற்க வைத்து தண்டனை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் கூட்டத்திற்கு 9.30 மணிக்கு மேல் தாமதமாக வந்த அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட்டரங்கிற்கு வெளியிலேயே நின்று கொண்டிருந்தனர்.இதனால் பொதுமக்களும், மனு கொடுக்க வந்தவர்களும் ஆச்சர்யமாக பார்த்து சென்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா 9.30 மணிக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு முகாம் கூட்டரங்கிற்கு வந்துவிட்டார்.சுமார் 15 நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்த கலெக்டர், பல அதிகாரிகள் அதற்குள்ளும் வராததால், தாமதமாக வந்தவர்களை வெளியிலேயே நிற்க வைத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அதிகாரிகளை உள்ளே அனுமதித்தார். இந்த சம்பவத்தால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications