விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுக.. மதுரையில் பந்த்
Recommended Video

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரையில் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமானநிலையம், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்ட வேண்டும். ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்தில் முத்துராமலிங்கம் என்ற பெயரை மாற்றி அவரது முழு பெயரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று அச்சிடப்பட்டு அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவையை வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல்வேறு தேவர் அமைப்பினர் மதுரை நகரில் இன்று ஒரு நாள் பந்த், கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

80 சதவீத கடைகள் அடைப்பு
80 சதவீதமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் பேருந்துகள் வழக்கம் போல ஓடுகின்றன. ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் மட்டுமே விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

விமான நிலையத்தில் பாதுகாப்பு
தினமும் பரபரப்பாக காணப்படும் மதுரை விமான நிலையம் இன்று வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. விமான நிலையத்திற்குள் போராட்டக்காரர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், அதிவேக அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் வெளி வளாகத்தில் மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ரவிசங்கர் தலைமையில் விமான நிலைய பின்புறம், பெருங்குடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தேவர் சிலை முன் போராட்டம்
மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு காணப்படுவதால் பயணிகள் சிலரை தவிர விமான நிலையம் காவல்துறையினரால் நிரம்பியுள்ளது. இதற்கிடையே, 500க்கும் மேற்பட்ட தேவர் அமைப்பினர் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்துகளும் திருப்பி விடப்பட்டுள்ளன.

மதுக் கடைகள் அடைப்பு
இதற்கிடையே, நேற்று மாலை 6 மணி முதல் மதுரை மாநகர் பகுதிக்கு உட்பட்ட அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு தற்போது வரை கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications