Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூரில் கோயிலில் ஆயிரக்கணக்கில் கட்டணமா? ஏழைகள் எப்படி தரிசனம் செய்வர்?: ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டியின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியதில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.. அத்துடன், திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டணம் குறித்தும் நீதிபதிகள் காட்டமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. விழாவின்போது தினமும் 1 லட்சம் பக்தர்கள் திருச்செந்தூர் வருகிறார்கள். சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் சாதாரண நாட்களில் இலவச தரிசனம் உள்ளது. விரைவு தரிசனத்துக்கு ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

tiruchendur thoothukudi

விசேஷ நாட்களில் விரைவு தரிசன கட்டணம் இரட்டிப்பாக, அதாவது ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது விரைவு தரிசன கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1,000 என நிர்ணயித்து வசூலித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பக்தர்கள் கைதானார்கள். பின்னர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி வைத்தது.

தரிசன கட்டணம்: இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா விரைவில் தொடங்க உள்ளது. இதில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் விரைவு தரிசன கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1,000 வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்புடையதல்ல.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஏழை பக்தர்கள், கடவுளை தரிசனம் செய்வது மிகவும் கடினமாகிவிடும். எனவே கந்த சஷ்டி விழாவின்போது தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தரிசனத்துக்கு ஆதார் எண் அடிப்படையில் இணையதளம் வழியாக முன்கூட்டியே டோக்கன் வழங்கவும், இதற்காக சிறப்பு மையங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.

ஏழைகள்: இந்த மனுவானது நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவில்களில் தரிசனம் செய்வதற்கு ஆயிரம், இரண்டாயிரம் என வசூலித்தால், ஏழை மக்கள் எவ்வாறு சாமி தரிசனம் செய்வார்கள்? அவர்களால் இந்த தொகையை செலுத்த இயலுமா? இவ்வளவு கட்டணம் ஏன்? அப்படியானால் ஏழைகள் சாமி கும்பிட கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோவிலா? என அடுத்தடுத்து கேள்விகளை காட்டமாக எழுப்பினார்கள்.

மேலும், இந்த மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, நவம்பர்7 க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+