Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு ஸ்பெஷல் ஏற்பாடா? ஸ்டாலினுக்கே பறந்த புகார்.. அதிகாரி மீது ஆக்சன்..பின்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: இன்று மதுரைக்கு வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்காக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் சண்முகம் மீது தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் இன்று மதுரைக்கு வரும் நிலையில், அவரின் வரவேற்பிற்காக சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உத்தரவிட்டு இருந்தார். துணை ஆட்சியரான இவரின் உத்தரவு பெரிய சர்ச்சையானது.

மோகன் பாகவத் செல்லும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

மதுரை சத்தியசாய் நகரில் சாய்பாபா கோவில் உள்ளது. கோவிலில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோகன் பாகவத் வருகிறார். இதற்காகவே இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்யும்படி சண்முகம் உத்தரவிட்டு இருந்தார். இவரின் இந்த உத்தரவு இணையம் முழுக்க நேற்று பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர் இல்லாத ஒருவருக்காக ஏன் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

திமுக

திமுக

முக்கியமாக திமுகவினர் பலரும் அரசுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து இருந்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவாக செல்ல வேண்டும் என்றால் ஏன் திமுக ஆட்சி என்று கூட சில திமுக நிர்வாகிகள் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருந்தனர். அதோடு மதுரை சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் தொடங்கி பலர் இந்த அறிவிப்பை கடும் கேள்விக்கு உள்ளாக்கி இருந்தனர் .

எந்த உத்தரவு

எந்த உத்தரவு

அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மதுரை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும், என்று சு. வெங்கடேசன் வெளிப்படையாக கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பான புகார்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினுக்கே நேரடியாக சென்று இருக்கிறதாம்.

முதல்வர்

முதல்வர்

நேரடியாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் முதல்வர் ஸ்டாலினிடம் இது பற்றி புகார் அளித்து இருக்கிறார். இந்த தொடர் புகார்களை தொடர்ந்து நேற்று இரவே மோகன் பாகவத்திற்காக சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மதுரை உதவி ஆணையர் சண்முகம் மீது தமிழ்நாடு அரசு ஆக்சன் எடுத்துள்ளது. மதுரை மாநகராட்சி பணியில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆக்சன்

ஆக்சன்

அதோடு இவர் தனது நியமன அலுவலர் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. திடீரென இப்படி ஒரு சர்ச்சைக்குரிய உத்தரவை வெளியிட்டதற்காக இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+