மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- தமிழக அரசே நடத்த அதிரடி முடிவு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்துவதற்கு அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பு தடை பெற்றது.

ஜல்லிக்கட்டு புரட்சி
இந்த தடையை உடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் ஒரு வார காலம் ஒன்று திரண்டு நடத்திய தை புரட்சி அல்லது சென்னை மெரினா புரட்சி உலக நாடுகளை அதிர வைத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரும் அமைதிவழி போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து பார்த்து ரசித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு மதுரை அவனியாபுரத்தில் வரும் 14-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான குழு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.

தமிழக அரசு நடத்தும்
இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசே மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள்
மேலும் கொரோனா பரவல் காரணமாக இப்போட்டியை காண்பதற்கு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். உள்ளூர் பிரமுகர்களின் வீடுகளுக்கு உறவினர்கள் யாரும் வருகை தரக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டிருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications