ஊரடங்கு எதிரொலி - பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடி- வைரல் வீடியோ
மதுரை: ஊரடங்கு காரணமாக பறக்கும் விமானத்தில் நடுவானில் திருமணம் செய்துகொண்ட மதுரை ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்து பல்வேறு திருமணங்கள் அவசரவசரமாக இன்றையே தினமே நடத்தப்பட்டது.
ஆங்காங்கே மண்டபங்களில் குறைந்த அளவு ஆட்கள் அனுமதியுடன் திருமணங்கள் நடந்து முடிந்தன. இந்நிலையில் மதுரையை சேர்ந்த மீனாட்சி ராகேஷ் - தீக்ஷனா தம்பதியினர் பறக்கும் விமானத்தில் பயணித்தபடி திருமணம் செய்துள்ளனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் வருகை தந்த ஜோடி தங்களது உறவினர்கள் முன்பாக மணமகன், மணமகளுக்கு தாலி கட்டி திருமணம் முடித்தார்.
இதையடுத்து இருவரும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆசிபெற்றுகொண்டனர். விமான பயணம் என்பதால் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிர லாக்டவுன் முதல் வேக்சின் வரை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு.. முதல்வர் ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவு!
மதுரையை சேர்ந்த ஜோடி பறக்கும் விமானத்தில் பயணத்தின்போது திருமணம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.