மதுரையில் அக்டோபர் 1 முதல் முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்.. போலீஸார் அறிவிப்பு
மதுரை: மதுரையில் அக்டோபர் 1 முதல் 26 ஆம் தேதி வரை சில முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மதுரை மாநகரப் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம் ஏன்? : மதுரை செல்லூர் தத்தனேரி ரயில்வே மேம்பாலத்தில் பாலம் இணைக்கும் பணிகள் நடைபெறுவதால் பாலத்தின் இருமார்க்கமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பேருந்துகள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது புறம், குரு தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
கோரிப்பாளையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஏவி பாலம் யானைகள் சந்திப்பு, சிம்மக்கல் ரவுண்டானா, தமிழ்ச்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் செல்ல வேண்டும்.
இதேபோல் மறுமார்க்கமாக தமிழ்ச் சங்கம் ரோடு, சிம்மக்கல் ரவுண்டானா, யானைகள் சந்திப்பு, புது பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி, கோரிப்பாளையம் சந்திப்பை அடையலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது, குரு தியேட்டர் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ்ச் சங்கம் ரோடு வழியாக வரலாம்.
இதேபோல் பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது, கூடல் நகர் ரயில்வே மேம்பாலம், ஆனையூர், ஐயர் பங்களா சந்திப்பு, பொது நத்தம் சாலை வழியாகவும் மற்றும் மூன்று மாவட்ட சந்திப்பு, அழகர் கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்லலாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்களான இலரகு நான்கு சக்கர வாகனங்கள் செல்லுர் பாலம் வரும் வரை எந்த மாற்றமும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம், தத்தனேரி சப்வே வழியாக பாலம் ஸ்டேஷன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு போகலாம்.
மறு மார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை எந்த மாற்றமும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடக்கரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்" இவ்வாறு மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications