41 பேர் இறப்பு ஒரு விபத்து! அதை விபத்தாகத்தான் பார்க்க வேண்டும்! தவெக புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எஃப்ஐஆரில் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளதே அது என்ன அறிவுரை என தெரியவில்லை என்று முன்ஜாமீன் கோரிய மனுவில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும் விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், "எஃப்ஐஆரில் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது, என்ன அறிவுரை என தெரியவில்லை.

karur vijay madurai

இது காவல் துறையால் புனையப்பட்ட வழக்கு- ஆனந்த். கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ரவுடிகள் புகுந்தனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என எங்களுக்கு தெரியாது. ஒட்டுமொத்தமாக மக்கள் கூடிய பிறகு காவல் துறை தடியடி நடத்தியது ஏன்?

வேலுச்சாமிபுரம் பரப்புரைக்கு ஒரு நாள் முன்னர்தான் காவல் துறை அனுமதி கொடுத்தது. ஒரே நாளில் எப்படி ஏற்பாடுகளை செய்ய முடியும்? வேலுச்சாமிபுரம் வேண்டாம், வேறு இடம் வேண்டும் என முறையிட நீதிமன்றத்தை நாட வந்தோம்.

ஆனால் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் கொடுத்த இடத்திலேயே பரப்புரையை மேற்கொண்டோம். நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. கூட்டத்தில் காலியாக ஆம்புலன்ஸ் வாகனம் புகுந்தது. விபத்தை விபத்துகளாக பார்க்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது, அரசுக்குத்தானே, நாங்கள் எப்படி கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என இருவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+