வட இந்தியா பாணியில் தமிழகத்திலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு-மதுரையில் திரளுகின்றனர்
மதுரை: வட இந்தியாவில் பதற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்து சாமியார்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு மதுரையில் ஜூன் 4,5 தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் சாமியார்கள் திரளுகின்றனர்.
வட இந்தியாவில் பல இடங்களில் இந்து துறவிகள் மாநாடு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்கிற வன்முறை பேச்சுகளை சாமியார்கள் பேசினர். அத்துடன் மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்தும் கொலைகாரன் கோட்சேவை புகழ்ந்தும் சாமியார்கள் பேசி இருந்தனர்.

மதுரையில் சாமியார்கள் மாநாடு
சாமியார்களின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு சர்ச்சை கருத்துகளை பேசிய சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வட இந்தியா பாணியில் தமிழகத்தில் சாமியார்கள் மாநாடு நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை மூலம் மாநில மாநாடு வரும் ஜூன் 4, ஜூன் 5-ந் தேதி நடைபெற உள்ளது. தேசிய, மாநில அளவில் உள்ள துறவிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

குழந்தைகளுக்கு ஆன்மீகம்
தமிழகத்தில் அறநிலையத்துறை தனித்து இயங்கும் வாரியமாக மாற வேண்டும், கோவில்களில் நிலவும் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண வேண்டும். ஆன்மீகத்தில் பாரத நாடு உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு ஆன்மீகத்தை கொண்டு சேர்ப்பதற்கான நெறிமுறையை துறவிகள் வகுக்க உள்ளோம். சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் துறவிகள் பேச உள்ளோம்.

குறையும் இந்து மக்கள் தொகை
சுதந்நிர இந்தியாவில் இருந்த மக்கள் தொகைக்கும், நாட்டில் தற்போது நிலவும் இந்து மக்கள் தொகைக்கு பெரிய வேறுபாடு உள்ளது. மாநாட்டில் மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதம் திரும்பியவர்களை வரவேற்பது, பசுக்களை பாதுகாப்பது, ஆன்மீக சிந்தனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து துறவிகள் சிந்திக்க உள்ளோம். மதுரையில் ஜூன் 5ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், சங்காராச்சாரியரும் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவுக்கு கொள்கை கொடுத்ததே துறவிகள் தான். எங்களுடைய கொள்கைகளை தான் பாஜகவினர் பேசுகின்றனர்.

துறவிகள் மாநாடு
துறவிகள் மாநாடு கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனி வாரியமாக இருந்தது என்றால் கல்வி மருத்துவம் உள்ளிட்ட சேவை பணிகளை செய்ய முடியும். எல்லோருக்கும் தனித்தனி வாரியம் உள்ளது. மற்ற மதத்தினருக்கு தனி சலுகைகள் உள்ளன. கோவில் நிலங்களை மீட்டெடுப்பதில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உடனடி அனுமதி வழங்குகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை நல்ல பணிகள் செய்து கொண்டுள்ளனர். இந்து சமயநிலையத்துறை செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications