வட இந்தியா பாணியில் தமிழகத்திலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு-மதுரையில் திரளுகின்றனர்
மதுரை: வட இந்தியாவில் பதற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்து சாமியார்கள் மாநாடு தமிழகத்தில் நடைபெற உள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு மதுரையில் ஜூன் 4,5 தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் சாமியார்கள் திரளுகின்றனர்.
வட இந்தியாவில் பல இடங்களில் இந்து துறவிகள் மாநாடு என்ற பெயரில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்கிற வன்முறை பேச்சுகளை சாமியார்கள் பேசினர். அத்துடன் மகாத்மா காந்தியை கடுமையாக விமர்சித்தும் கொலைகாரன் கோட்சேவை புகழ்ந்தும் சாமியார்கள் பேசி இருந்தனர்.

மதுரையில் சாமியார்கள் மாநாடு
சாமியார்களின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டு சர்ச்சை கருத்துகளை பேசிய சாமியார்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வட இந்தியா பாணியில் தமிழகத்தில் சாமியார்கள் மாநாடு நடத்த விஸ்வ ஹிந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை மூலம் மாநில மாநாடு வரும் ஜூன் 4, ஜூன் 5-ந் தேதி நடைபெற உள்ளது. தேசிய, மாநில அளவில் உள்ள துறவிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

குழந்தைகளுக்கு ஆன்மீகம்
தமிழகத்தில் அறநிலையத்துறை தனித்து இயங்கும் வாரியமாக மாற வேண்டும், கோவில்களில் நிலவும் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண வேண்டும். ஆன்மீகத்தில் பாரத நாடு உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது. குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு ஆன்மீகத்தை கொண்டு சேர்ப்பதற்கான நெறிமுறையை துறவிகள் வகுக்க உள்ளோம். சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் துறவிகள் பேச உள்ளோம்.

குறையும் இந்து மக்கள் தொகை
சுதந்நிர இந்தியாவில் இருந்த மக்கள் தொகைக்கும், நாட்டில் தற்போது நிலவும் இந்து மக்கள் தொகைக்கு பெரிய வேறுபாடு உள்ளது. மாநாட்டில் மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதம் திரும்பியவர்களை வரவேற்பது, பசுக்களை பாதுகாப்பது, ஆன்மீக சிந்தனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து துறவிகள் சிந்திக்க உள்ளோம். மதுரையில் ஜூன் 5ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், சங்காராச்சாரியரும் கலந்து கொள்ள உள்ளனர். பாஜகவுக்கு கொள்கை கொடுத்ததே துறவிகள் தான். எங்களுடைய கொள்கைகளை தான் பாஜகவினர் பேசுகின்றனர்.

துறவிகள் மாநாடு
துறவிகள் மாநாடு கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனி வாரியமாக இருந்தது என்றால் கல்வி மருத்துவம் உள்ளிட்ட சேவை பணிகளை செய்ய முடியும். எல்லோருக்கும் தனித்தனி வாரியம் உள்ளது. மற்ற மதத்தினருக்கு தனி சலுகைகள் உள்ளன. கோவில் நிலங்களை மீட்டெடுப்பதில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உடனடி அனுமதி வழங்குகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை நல்ல பணிகள் செய்து கொண்டுள்ளனர். இந்து சமயநிலையத்துறை செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications