பள்ளிக்கு ஒதுக்கிய நிலம்.. தஞ்சாவூர் மேயரின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதா? ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் உள்ள பல ஏக்கர் நிலம் பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடம் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சி கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிலம் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோதமாக தஞ்சாவூர் மேயரின் மனைவி பெயருக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பத்மநாபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்தம்மாள் நகரில் பல ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பள்ளி கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இடம் தமிழக அரசின் வருவாய் ஆவணங்களில் தஞ்சை மாநகராட்சி கமிஷனர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு தனிநபரின் பெயரில் இந்த இடம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டு பட்டா பெறப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக சம்பந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நிலத்தையும் அதிகாரிகள் மீட்கவில்லை. தற்போது அந்த நிலம் தஞ்சை மாநகராட்சி மேயரின் மனைவி பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டிருக்கிறது.
தற்போதைய தஞ்சை மாநகராட்சி மேயர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் இந்த விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது என்று கருதுகிறேன். எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும். அதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தஞ்சை மாவட்ட வருவாய் மண்டல அலுவலரை தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகவும், வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications