காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்கனும்.. கையில் சிக்கினால் அடிதான்.. கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் சிலைக்கு காவி கொடியை போட்டவர்கள் கைகளில் கிடைத்தால், அடி நொறுக்கிவிடுவோம் என்றும், காவி இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி, சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ-வுமான செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜூ கூறுகையில், மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவி கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்ஜிஆர் சமூகநீதித் தலைவர். அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவர் இழிபிறவி என்பேன். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இதனைத் தொடர்ந்து திமுக அரசு மேற்கொள்ள உள்ள கொரோனா முன்னெச்சரிக்கை பணி குறித்த கேள்விக்கு, அதிமுக ஆட்சியில் காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் திமுக அரசு குடியேறியுள்ளது. எனவே கொரோனா தொடர்பான பிரச்னையை ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள், படுக்கை வசதி உள்ளிட்டவை மூலம் முறையாக கவனித்தால் போதும் என்று தெரிவித்தார்.

இபிஎஸ் பங்கேற்பாரா?

இபிஎஸ் பங்கேற்பாரா?

தொடர்ந்து மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பாரா என்பது தெரிய வரும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இல்லை என்றால் பங்கேற்பார் என்று தெரிவித்தார்.

காலம் இருக்கிறது

காலம் இருக்கிறது

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு குறித்த கேள்விக்கு, இது தொடர்பான பணி 2023 ஆண்டிற்குள் நிறைவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி பணிகள் நிறைவடையவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி கடும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 செல்லூர் ராஜூ தவிர்ப்பு

செல்லூர் ராஜூ தவிர்ப்பு

பின்னர் அதிமுக குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, அதிமுக தொண்டர்களை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்று கூறிவிட்டு, அதிமுக மற்றும் ஓபிஎஸ் தொடர்பான கேள்விகளை தவிர்த்தார்.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

தொடர்ந்து திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது. மக்களுக்கு என்ன தேவை என்ற கேள்வியை முன் வையுங்கள் என்று பத்திரிகையாளர்களுடன் ஆவேசமாக வாதிட்டார். திமுக ஆட்சி பற்றிய பேசிய செல்லூர் ராஜூ, கருணாநிதி கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

 உதயநிதி செய்தது என்ன?

உதயநிதி செய்தது என்ன?

அதேபோல் உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலினின் பெயரை வைத்து வருகிறார். உதயநிதி நாட்டுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்? நயன்தாராவை கட்டிப்பிடித்ததும், ஹன்சிகாவை காதல் செய்ததையும் மட்டும் தான் உதயநிதி செய்ததாக கூறிவிட்டு வேகமாக புறப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+