மோடி எப்பொழுது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும்.. வைகோ பேட்டி
மதுரை:தமிழகத்துக்கு மோடி எப்போது வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலளார் வைகோ கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக அரசு அமைந்தால் நல்லது என்று கூறிய வைகோ. 2014ம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.பின்னர் குறுகிய காலத்தில் அந்த கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.
மத்தியில் செயல்படும் பாஜக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்றும் வைகோ கூறி வருகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் போராட்டங்களையும் அறிவித்து நடத்தியுள்ளார்.

பேட்டியளித்தார் வைகோ
இந் நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி எப்போது வந்தாலும் கருப்புக் கொடி காட்டப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு
அவர் மேலும் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கவில்லை. நேற்றைக்கு உச்சநீதி மன்றத்தில் நான் பங்கேற்றேன்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லி உத்தரவு வந்தது போல் தவறான செய்தி வந்துள்ளது.

தடையை நீக்கி உத்தரவு
மதுரை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தடையை நீக்கி விட்டார்கள் அவ்வளவு தான். அதே நேரத்தில் ஆலையைத் திறப்பது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தமிழ்நாடு அரசும் கொள்கைகளை எந்த அளவு நிறைவேற்றி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

விசாரணை எப்போது?
பசுமை தீர்ப்பாயம் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த விசாரணை எப்போது வரும் என்று தெரியாது. அரசியல் சட்டத்தில் 16, 17 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பொருளாதார அடிப்படையில் இதை சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓட்டுகளை வாங்கும் முயற்சி
3 மாநில படுதோல்விக்கு பின்னர், அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட வேறு வகுப்பு பிரிவினரின் ஓட்டுகளை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக, இந்த திருத்தத்தை 15, 16 உட்பிரிவு சேர்த்து 10% கொடுத்துள்ளனர். இதனை சில கட்சிகள் வரவேற்று உள்ளனர். அதை விமர்சிக்க விரும்பவில்லை.

கருப்புக்கொடி காட்டப்படும்
இந்த சமூக நீதியை கொண்டுவந்தது தமிழ்நாடு. எனவே கடைசியாக ஆட்சியை இழந்து போகிற போக்கில் மோடி அரசு எப்படி எல்லாம் வஞ்சகம் செய்யலாம் என்பதை என்று பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்." என்று வைகோ கூறினார்.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications