மோடி எப்பொழுது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும்.. வைகோ பேட்டி
மதுரை:தமிழகத்துக்கு மோடி எப்போது வந்தாலும் என் தலைமையில் கருப்பு கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலளார் வைகோ கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக அரசு அமைந்தால் நல்லது என்று கூறிய வைகோ. 2014ம் ஆண்டு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.பின்னர் குறுகிய காலத்தில் அந்த கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்தார்.
மத்தியில் செயல்படும் பாஜக மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், தமிழக மக்களை வஞ்சிக்கிறது என்றும் வைகோ கூறி வருகிறார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் போராட்டங்களையும் அறிவித்து நடத்தியுள்ளார்.

பேட்டியளித்தார் வைகோ
இந் நிலையில் தமிழகத்துக்கு பிரதமர் மோடி எப்போது வந்தாலும் கருப்புக் கொடி காட்டப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு
அவர் மேலும் கூறியதாவது:ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கவில்லை. நேற்றைக்கு உச்சநீதி மன்றத்தில் நான் பங்கேற்றேன்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லி உத்தரவு வந்தது போல் தவறான செய்தி வந்துள்ளது.

தடையை நீக்கி உத்தரவு
மதுரை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தடையை நீக்கி விட்டார்கள் அவ்வளவு தான். அதே நேரத்தில் ஆலையைத் திறப்பது குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தமிழ்நாடு அரசும் கொள்கைகளை எந்த அளவு நிறைவேற்றி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

விசாரணை எப்போது?
பசுமை தீர்ப்பாயம் போட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடுத்த விசாரணை எப்போது வரும் என்று தெரியாது. அரசியல் சட்டத்தில் 16, 17 பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பொருளாதார அடிப்படையில் இதை சேர்க்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஓட்டுகளை வாங்கும் முயற்சி
3 மாநில படுதோல்விக்கு பின்னர், அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட வேறு வகுப்பு பிரிவினரின் ஓட்டுகளை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக, இந்த திருத்தத்தை 15, 16 உட்பிரிவு சேர்த்து 10% கொடுத்துள்ளனர். இதனை சில கட்சிகள் வரவேற்று உள்ளனர். அதை விமர்சிக்க விரும்பவில்லை.

கருப்புக்கொடி காட்டப்படும்
இந்த சமூக நீதியை கொண்டுவந்தது தமிழ்நாடு. எனவே கடைசியாக ஆட்சியை இழந்து போகிற போக்கில் மோடி அரசு எப்படி எல்லாம் வஞ்சகம் செய்யலாம் என்பதை என்று பார்க்கிறது. தமிழ்நாட்டிற்கு மோடி என்று வந்தாலும் என் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்." என்று வைகோ கூறினார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications