மதுரையில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் தேவிஸ்ரீ... கல்யாணமான ஒரு மாதத்தில் இப்படியா ஆகணும்
மதுரை: திருமணம் ஆன புதிதில் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று.. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் அந்த காலக்கட்டத்தில், கணவன் குடும்பத்தை பற்றி மனைவிக்கும், மனைவி குடும்பத்தை பற்றி கணவனுக்கும் தெரியவரும். அப்போது ஈகோ பார்க்காமல் இருவரும் விட்டுக்கொடுத்து, ஒருவருக்காக ஒருவர் துணை நின்றால் பிரச்சனை வராது. மாறாக முறிக்கி கொண்டு நின்றால் சிக்கலாகும். மதுரையில் விருந்துக்கு வந்த இடத்தில் புதுப்பெண் எடுத்த முடிவு ஆடிப்போக வைத்துள்ளது,
திருமணத்திற்கு பின்னர் முதல் இரண்டு ஆண்டுகள் கணவன் மனைவி இடையே பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படும். அதேபோல் புதிதாக திருமணம் ஆகி வந்த பெண்ணுக்கு கணவன் குடும்பத்தின் பழக்க வழக்கங்கள் புரிய காலம் எடுக்கும். அதேபோல் மனைவி குடும்பத்தினரை புரியவும் கணவனுக்கு காலம் எடுக்கும்.. அப்படியான சூழலில் கருத்து வேறுபாடு அல்லது சண்டை வரும் போது, இருவருமே மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும்.

சண்டைக்கு யார் காரணமோ, அவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.. கணவன் மனைவி இருவருமே வார்த்தைகளை கவனமாக விட வேண்டும்.. அப்படி இல்லாமல் மனம் போன போக்கில் அடக்கி ஆள நினைத்தால் சிக்கல் ஆரம்பம் ஆகும். திருமணம் ஆன புதிதில் சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ஆகும். அப்படி ஏமாற்றம் நடந்தால், அதனை பக்குவமாக கையாள வேண்டும். அதனைவிட்டுவிட்டு தவறான முடிவு எடுக்கக்கூடாது.. மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மதுரை அருகே பரவை மேலவெளி வீதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் குளிர்பான கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகனும்,19 வயதில் தேவிஸ்ரீ என்ற மகளும் உண்டு. இதில் தேவிஸ்ரீ மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பரவை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் மகன் வக்கீல் புஷ்பவனம் (28) என்பவருக்கும் தேவிஸ்ரீக்கும் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி திருமணம் நடந்தது.
பின்னர் புஷ்பவனம்-தேவிஸ்ரீ தம்பதி, மாமானார் வீட்டிற்கு விருந்து வந்தார்கள். அதன்படி பரவையில் உள்ள தேவிஸ்ரீயின் தந்தை மூர்த்தி வீட்டுக்கு விருந்துக்கு வந்ததாகத் தெரிகிறது. நேற்று முன்தினம் காலையில் புஷ்பவனம், மாமனார் வீட்டில் இருந்து கோர்ட்டுக்குச் சென்று விட்டார். தேவிஸ்ரீயும் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தேவிஸ்ரீயிடம் அவருடைய தாயார் வசந்தா, கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றாராம்.
சிறிது நேரத்தில் வசந்தா திரும்பி வந்தபோது, கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவைத் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், மூர்த்திக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த மூர்த்தி, முன்வாசல் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு, தேவிஸ்ரீ மயங்கிய நிலையில் கிடந்தாராம். இதைப் பார்த்து அவர் அலறினார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவிஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், தேவிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?
- "விஜய் மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ஒரு வார்த்தையால் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. என்ன மேட்டர்?
- தேமுதிகவில் விலகிய கையோடு.. அதிமுகவில் இணைந்தார் நடிகர் மீசை ராஜேந்திரன்.. என்ன நடந்தது?
- திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க
- திமுகவில் எந்த சமூகத்தவருக்கு அதிக சீட்? வன்னியர், கவுண்டர்களுக்கு முன்னுரிமை? இதோ முழு லிஸ்ட்!
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!













Click it and Unblock the Notifications