ஆன்மிகம் -கல்வி -தொழில்! யார் இந்த கருமுத்து கண்ணன்! மதுரை மக்களின் மனங்களில் இடம்பிடித்தது எப்படி?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார், தொழிலதிபர், கல்வித்தந்தை என பன்முகங்களை கொண்ட கருமுத்து கண்ணன் மறைவு மதுரை மாநகர மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ஸ்டாலின், ப.சிதம்பரம் என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களின் அபிமானத்தை பெற்றவர் கருமுத்து கண்ணன்.

ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக நடந்துகொண்டவர் கருமுத்து கண்ணன். தியாகராசர் மில்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் இவர், தொழிலாளர்களுடன் சீராக நல்லுறவை பேணக்கூடியவர்.
அதேபோல் தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி என கல்லூரிகளையும் நிர்வகித்து வந்த கருமுத்து கண்ணன், இதுவரை ஒரு மாணவரிடம் கூட ஒரு ரூபாய் டொனேஷன் வாங்கிய வரலாறு இல்லை.
டொனேஷன், கேபிடேஷன் ஃபீஸ் என பெற்றோரை அலைக்கழிக்கும் போலி கல்வித் தந்தைகளுக்கு மத்தியில் கல்வியை அறத்துடன் வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் கருமுத்து கண்ணன்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக இன்று நேற்றல்ல 18 ஆண்டுகளாக இருந்து வரும் கருமுத்து கண்ணன், பக்தர்கள் போற்றத்தக்க தனது கோவில் நிர்வாக அறப்பணிகளை தொடர்ந்தார்.
அதிமுக, திமுக என தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனாட்சியம்மன் கோவில் தக்காராக கருமுத்து கண்ணனே தொடர்ந்தார். காரணம் அரசியல் பார்க்காமல் எல்லோரிடத்திலும் யதார்த்தமாக நடந்தக் கொள்ளக்கூடியவர்.
இவரது தந்தை தியாராசர் செட்டியார் நிறுவிய தியாகராசர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த பலர் இன்று உலகம் முழுவதும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். மொழிப்போரின் போது கருமுத்து கண்ணனின் தந்தை தியாகராசர் செட்டியார் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றவர்.

முதலமைச்சரிடத்தில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு செல்வாக்கு இருப்பினும், அடக்கத்துடன் ஆரவாரமின்றி செயல்பட்டவர் கருமுத்து கண்ணன். ஆன்மிகம், கல்வி, தொழில், ஆகியவற்றை கடந்து சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் கருமுத்து கண்ணன்.
மதுரை மாநகர வளர்ச்சிக்கு எண்ணற்ற பங்களிப்பை செலுத்தியவர். தனது தந்தையை போல் தமிழ் பற்றாளராக திகழ்ந்தவர். முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதியால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு - மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர்.
அதேபோல் இப்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உருக்கமுடன் இரங்கல் விடுத்துள்ள நிலையில், அமைச்சர் பிடிஆரும், வைகோவும் கண்ணீர் விட்டு அழுதவாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அரசியல் தட்பவெப்ப நிலைகளை பற்றி கவலைக்கொள்ளாமல் வைகோவுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வந்தவர் கருமுத்து கண்ணன்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications