Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிகிட்டயே.. "அவங்களை" பற்றி சொல்லிட்டேன்.. ஏன் தெரியுமா.. மதுரையில் குண்டை தூக்கி போட்ட ஆதீனம்

பிரதமரை ஏன் சந்தித்து பேசினேன் என்பது குறித்து ஆதீனம் விளக்கம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரதமர் மோடியை தான் ஏன் சந்தித்து பேசினேன், எதற்காக புகார் சொன்னேன் என்பது குறித்து மதுரை ஆதீனம் விளக்கம் தந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பிரவேச விவகாரம் தலைதூக்கியது.. இதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சித்து மதுரை ஆதீனம் அப்போது பேசியிருந்தார்..

இதற்கு திராவிடர் கழகம் தன்னுடைய எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தது.. பட்டினப்பிரவேசத்தை கண்டித்தது.. இதையடுத்து, திருமாவளவன் உட்பட பல கட்சிகளும் ஆதீனம் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 திமுக ஆதரவு

திமுக ஆதரவு

இதனால், ஆளுங்கட்சியினரால் தன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்தது பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தார் ஆதீனம்.. உண்மையை சொல்லப்போனால், ஆதீனம் இந்த விஷயத்தை பற்றி பேச பேசதான், பட்டினப்பிரவேசம் என்ற விவகாரமே பெரிதானது.. சர்ச்சையை கிளப்பியது.. ஒருவழியாக திமுக அரசு இந்த விஷயத்தில் "நடுநிலைமை"யுடன், ஆதரவு தரவும், விவகாரம் முடிவுக்கு வந்தது.

 வீரமணி

வீரமணி

அப்போதும், வீரமணியை சீண்டி, நன்றி சொல்லி பேட்டி தந்திருந்தார் ஆதீனம்... எனினும் மோடியை சந்தித்து புகார் சொல்ல போகிறேன் என்பவர், நிஜமாகவே, சொன்னபடியே பிரதமரையும் சந்தித்து, புகாரும் சொல்லிவிட்டார்.. பிரதமர் மோடி டெல்லி புறப்பட சென்னை ஏர்போர்ட் வந்தபோது, அங்கு ஸ்ட்ரைட்டாகவே சென்று சந்தித்து பேசினார். பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு விதித்த கண்டனம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பது வரை ஒன்றுவிடாமல் புட்டு புட்டு வைத்துவிட்டார். இந்த சந்திப்பும், புகாரும் குறித்துதான், இன்றைய தினம் ஆதீனம் சொல்லி உள்ளார்.

 துறவியர் மாநாடு

துறவியர் மாநாடு

இப்போது மீண்டும் ஒருவிஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்.. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஒரு அங்கமான, அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில், மதுரை பரவை ஆகாஷ் கிளப் மஹாலில், 2 நாள் துறவியர் மாநாடு இன்று துவங்கியது.. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் துவக்க உரையாற்றினார்... விஎச்பி அகில உலக இணை பொதுச்செயலர் தாணுமலையான் தலைமை உரையாற்றினார்.

 கோயில் சொத்து

கோயில் சொத்து

இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசியதாவது: "கோயிலை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் போராட்டம் நடத்தினோம்... கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதி பூச மறுக்கின்றனர்... கோயில் சொத்துகளுக்கு குத்தகை, வாடகை பணம் முறையாக வருவதில்லை... இதைபற்றி கேட்டால், பேசினால் இடையூறு செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள்.. ஆதீனம் என்றால், அதற்காக பதுங்கி கிடக்க முடியாது... ஜால்ரா அடிக்க முடியாது. ஒரே குறிக்கோள், இந்துக்களுக்கு ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும்... இதையெல்லாம் பேசியதனால்தான், பிரதமரிடம் நான் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது" என்றார்.

 மதமாற்றம்

மதமாற்றம்

தொடர்ந்து, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் பேசும்போது, மதமாற்றத்தை தடுக்க வேண்டும். சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தனித்து இயங்கும் வாரியத்தின் கீழ் கோயிலை கொண்டு வர வேண்டும் என்றார்... மாநாட்டில் விஎச்பி. அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அதாவது, மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதத்திற்கு திரும்புவோரை ஊக்குவிப்பது, கிராமங்களில் துறவியர் தங்கி தொண்டாற்றி ஏற்றத்தாழ்வுகளை போக்குவது இதெல்லாம் குறித்து பேசத்தான் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+