ஓ. ராஜா நீக்கத்திற்கு தினகரனுடன் கை கோர்த்ததுதான் காரணமா?
ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டதன் அடிப்படை காரணங்கள் என்ன?
Recommended Video

மதுரை: சால்வைகள், மாலைகள், என வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும்போதே ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அதிமுக தரப்பில் ஏற்படுத்தி உள்ளது.
துணை முதல்வரும், முதல்வரும் கூட்டாக இணைந்துதான் இந்த அறிவிப்பை வெளியிட்டாலும், ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு 2, 3 காரணங்கள் கூறப்படுகின்றன. தேனி மாவட்ட அதிமுக பொருளாளராக இருப்பவர் செல்லமுத்து.
ஆவின் தலைவர் பதவிக்கு செல்லமுத்துவும் ஆசைப்பட்டார், ஓ.ராஜாவும் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஓ.ராஜா தலைவராக அறிவிக்கப்பட்டதும், செல்லமுத்துவுக்கு ஆத்திரம் வந்திருக்கிறது. தனக்கு பொறுப்பை தருவதாக சொல்லிவிட்டு, தம்பிக்கு கொடுத்துவிட்டார்.

பதவி பறிப்பு
அதனால் ஓபிஎஸ்ஸால், அவரது தம்பியை கூட சமாதானம் செய்யமுடியவில்லை என்பதை பகிரங்கமாக வெளியே சொல்வேன் என்றும், கூடிய சீக்கிரம் திமுகவிற்கு சென்று விடுவேன் என்றும் கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாகவே ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர் ஒரு தரப்பினர்.

டிடிவி தினகரன்
மற்றொரு தரப்பினரோ, கூட்டுறவு பால்வளத் தலைவர் பதவிக்கு 8 டைரக்டர்கள் சேர்ந்து தேர்ந்தெடுக்க முடியும் என்பது விதி. இந்த 8 பேரில் 3 பேர் டிடிவி தினகரன் அணியை சேர்ந்தவர்கள். அந்த 3 பேரின் வீட்டுக்குதான் ஓ.ராஜா சென்று ஆதரவு அளிக்கும்படி கேட்டிருக்கிறார்.

முதல்வர் பழனிசாமி
இப்படி போய் பேசும்போதுதான் ஆதாரம் அதிமுக தரப்புக்கு போய்விட்டது. இதை பார்த்து கொதித்து போன முதல்வர் உடனடியாக டிஸ்மிஸ் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே தேனி மாவட்டத்தில் நீயா, நானா பஞ்சாயத்து முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

பலம் குறைப்பா?
கடந்த அக்டோபர் மாதம்கூட, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடியார் பேரவை தொடங்கப்பட்டது, ஓ.பி.ஸ். ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலத்தை தொகுதியில் குறைக்கவே ஓ.ராஜா விஷயத்தில் முதல்வர் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏராளமான புகார்கள்
இதற்கெல்லாம் மேலாக, ஓ.ராஜா மீது ஏற்கனவே உள்ள பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கு, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. இதை வைகை ஆற்றுப்படுகையில் திருட்டு மணல் அள்ளி விற்பது என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் ராஜா மீது இருக்கிறது.

செல்வாக்கு சரிவு
இதையெல்லாம் திருத்தி கொள்ளும்படியும், விட்டுவிடும்படியும் ஓபிஎஸ் எவ்வளவோ கூறியும் தனது போக்கை ஓ.ராஜா மாற்றி கொள்ளவில்லை என தெரிகிறது. தொடர்ந்து இப்படியே நிலை நீடித்தால், அது தொகுதியிலும், கட்சியிலும் தனது செல்வாக்கை மேலும் சரிவிற்கு கொண்டு செல்லும் என்பதாலேயே டிஸ்மிஸ் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications