அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. நீதிமன்றமே விழாக்குழுவை அமைக்கிறது.. ஜாதி பிரச்சினைகளால் அதிரடி
Recommended Video

சென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, நீதிமன்றமே, குழு அமைக்கும் என்று, மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அரசு அறிவித்தது. இதனிடையே, ஜல்லிக்கட்டு விழா குழு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த குழுவை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். ஒரே ஜாதி ஆதிக்கம் இருக்க கூடாது என 14 வழக்குகள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் இணைக்கப்பட்டு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜாதி பிரச்சினையை வைத்து ஜல்லிக்கட்டுக்கு பிரச்சினை ஏற்படகூடாது. எனவே நீதிமன்றமே விழா கமிட்டியை அமைக்கும். ஜல்லிக்கட்டுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்குவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட எஸ்.பி. மதுரை போலீஸ் கமிஷனர், இன்னும் அரை மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

சுமூகமாக ஜல்லிக்கட்டு நடத்த முன்வராவிட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இதன்பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான குழுவை நீதிமன்றமே அமைக்கும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மனுதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications