கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை சப்சேடாக முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!
ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மேற்கு வங்க மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மமதா பானர்ஜி, காங்கிரஸ் செல்வாக்கு இழந்த, பலவீனமான மாநிலங்களை குறிவைத்து அடுத்தடுத்து காய் நகர்த்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக இருக்கும் மாநிலங்களை குறிவைக்கிறார்.

கோவாவில் மமதா அதிரடி
இந்த வியூகத்தின் முதல் கட்டமாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. காங்கிரஸில் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தவர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் ஜோதியில் இணைத்தார் மமதா. அவரே கோவா சென்று நிர்வாகிகளை சந்தித்தும் பேசினார். இதனைத் தொடர்ந்து ஹரியானா, பீகார், டெல்லிக்கு குறிவைக்கும் வகையில் கீர்த்தி ஆசாத், பவன்குமார் வர்மா, அசோக் தன்வார் ஆகியோரை திரிணாமுல் காங்கிரஸில் இணைத்தார்.

காங். தலைவர்கள் டார்கெட்
இதன்மூலமாக திரிணாமுல் காங்கிரஸுக்கும் காங்கிரஸுக்கும் இருந்த குறைந்தபட்ச இணக்கமானது வேட்டு வைக்கப்பட்டது. இப்போது இதன் உச்சமாக மேகாலயா மாநிலத்தில் ஆகப் பெரும் அதிரடியை மமதா பானர்ஜி வெளிப்படுத்தி இருக்கிறார். மமதா பானர்ஜியைப் பொறுத்தவரையில் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக காலூன்றுவதில் கவனமாக இருக்கிறார். குறிப்பாக வங்க மொழி பேசும் மக்கள் செறிவாக வாழும் மாநிலங்களில் நிலைபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

வடகிழக்கில் வியூகம்
திரிபுரா, அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா என ஒவ்வொரு மாநிலத்திலும் கால் பதித்துக் கொண்டிருக்கிறது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. திரிபுராவில் ஆளும் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது மமதாவின் திரிணாமுல்தான். திரிபுராவை கோட்டை போல் கட்டி ஆண்ட இடதுசாரிகள் இருக்கிற இடமே தெரியாமல் போய்விட்டது. இதற்கு அடுத்ததாக மேகாலயா மாநிலத்தில் வலுவாக காலூன்றி இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

மேகாலயாவில் காங்.க்கு முடிவுரை
அம்மாநிலத்தில் மாஜி முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். மேகாலயா சட்டசபையில் காங்கிரஸுக்கு மொத்தம் 18 எம்.ஏல்.ஏக்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இப்போது மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாகி இருக்கிறது திரிணாமுல். மமதா பானர்ஜியின் இத்தகைய காங்கிரஸுக்கு எதிரான வலுவான வியூகம் அக்கட்சி மேலிடத்தை கடும் அதிருப்தி அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications