சட்டென பொய்த்த மழை.. கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கான நீர்வரத்து குறைந்தது- தமிழ்நாட்டுக்கு?
மண்டியா: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்படும் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளுக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிடுகிற சொற்ப நீர் எவ்வளவு நாளுக்கு தொடரும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டியதுதான் மண்டியா மாவட்டத்தின் கண்ணம்பாடி அணை எனப்படுகிற கிருஷ்ணராஜ சாகர் அணை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா கட்டிய அணையால்தான் காவிரி பிரச்சனை உருவானது. தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா கபளீகரம் செய்வது இந்த அணையால்தான்.

குடகு மாவட்டம்: கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதி குடகு மாவட்டம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது குடகு மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. ஆனால் அந்த கோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. குடகு மாவட்டத்தில் பெய்யும் மழையால்தான் கேஆர்எஸ் அணை நிரம்பும். அப்படி கேஆர்எஸ் அணை நிரம்பினால் உபரி நீரைத்தான் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறப்பதும் வழக்கம். கடந்த காலங்களில் அப்படித்தான் நடந்தது. இந்த ஆண்டு குடகு மாவட்டத்தில் பருவமழை பொய்த்துவிட்டது என்கிறது கர்நாடகா.
கேஆர்எஸ் அணை: கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. ஆகஸ்ட் மாதத்தில் கேஆர்எஸ் அணையில் இருந்த நீர் அளவு 117 அடி. சில நாட்களுக்கு முன்னர் கேஆர்எஸ் அணையில் 97 அடி நீர் இருந்தது. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு சொற்பமான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்நிலையில் திடீரென குடகு மாவட்டத்தில் மழை பெய்தது. இதனால் கேஆர்எஸ் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை எட்டியது. இதன்பின்னராவது காவியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறக்காமல் குறைவான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இந்நிலையில் குடகு மாவட்டத்தில் மழை குறைந்துவிட்டது. இதனால் கேஆர்எஸ் அணைக்கான நீர் வரத்து பெருமளவு குறைந்தது. அக்டோபர் 3-ந் தேதி கேஆர்எஸ் அணைக்கு 11,800 கன அடி நீர் வந்தது. இது 9,052 ஆக குறைந்து தற்போது வினாடிக்கு 5,861 கன அடி நீர்தான் வருகிறது. தற்போது கேஆர்எஸ் அணையில் 100.82 அடி நீர் இருக்கிறது.
கபினி அணை: இதேபோல தமிழ்நாட்டுக்கு வரக் கூடிய காவிரி நீர் கபினி அணையில் இருந்தும் திறக்கப்படுகிறது. இந்த அணைக்கான மழை பிடிப்பு பகுதி கேரளாவின் வயநாடு. மைசூர் மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு கடந்த 3-ந் தேதி வினாடிக்கு 3,349 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. தற்போது இது 2,800 அடியாக குறைந்துவிட்டது. கபினி அணையின் மொத்த கொள்ளளவு 19.52 டிஎம்சி. தற்போது நீர் இருப்பு 14.85 டிஎம்சி.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்?: கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2,489 கன அடிநீர் திறக்கப்பட்டது சற்று குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் இதே நிலைமை தொடர்ந்தால் தமிழ்நாட்டுக்கான சொற்ப நீரையும் கர்நாடகா திறக்காமல் போகும் அபாயம் உள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications