காவிரி: 87-வது நாளாக தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட விவசாயிகள் போராட்டம்.. மோடி மீது கடும் அதிருப்தி!
மண்டியா: காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் நேற்று 87-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி கனத்த மவுனம் காக்கிறார் என்பது கர்நாடகா விவசாயிகளின் குற்றச்சாட்டு.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்ற இறுதி உத்தரவும் வந்தது. இந்த இறுதி உத்தரவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பும் வந்தது. இதனடிப்படையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன.

கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறக்கலாம் என பரிந்துரைப்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் பணி. இதனை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிப்பது காவிரி மேலாண்மை ஆணையம். தமிழ்நாட்டுக்கு போதுமான நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்துகிற போதும் சொற்பமான நீரை திறந்துவிடவே ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கும்; மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். ஆனால் கர்நாடகாவோ, தமிழ்நாட்டுக்கு இந்த சொற்ப நீரைக் கூட திறந்துவிட மறுக்கும்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு காவிரி நீரைக் கூட திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு மண்டியாவில் பாஜகவினர் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மண்டியா நகரில் உள்ள விஸ்வேஸ்ரய்யா பூங்காவில் 87-வது நாளாக நேற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு கர்நாடகா ஒக்கலிகா கவுடா ஜாதி சங்கத்தினர் மற்றும் சில அமைப்புகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தன.
கர்நாடகா விவசாயிகளைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று குழு - மேலாண்மை ஆணையம் ஆகியவற்றைக் கலைக்க வேண்டும்; காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கக் கூடாது; பிரதமர் மோடியின் கனத்த மவுனம் கண்டனத்துக்குரியது என்கின்றனர். மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து நீரை திறக்கவே கூடாது என்பதும் இந்த விவசாயிகளின் போராட்டம். அண்மையில் இந்தப் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications