Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரி: 87-வது நாளாக தமிழ்நாட்டுக்கு எதிராக கன்னட விவசாயிகள் போராட்டம்.. மோடி மீது கடும் அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

மண்டியா: காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் நேற்று 87-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர். காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி கனத்த மவுனம் காக்கிறார் என்பது கர்நாடகா விவசாயிகளின் குற்றச்சாட்டு.

காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்ற இறுதி உத்தரவும் வந்தது. இந்த இறுதி உத்தரவு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று தீர்ப்பும் வந்தது. இதனடிப்படையில்தான் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டன.

Karnataka Farmers protest against release of Cauvery water continues on 87th day

கர்நாடகா அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நீர் திறக்கலாம் என பரிந்துரைப்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் பணி. இதனை ஆராய்ந்து உத்தரவு பிறப்பிப்பது காவிரி மேலாண்மை ஆணையம். தமிழ்நாட்டுக்கு போதுமான நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்துகிற போதும் சொற்பமான நீரை திறந்துவிடவே ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கும்; மேலாண்மை ஆணையம் உத்தரவிடும். ஆனால் கர்நாடகாவோ, தமிழ்நாட்டுக்கு இந்த சொற்ப நீரைக் கூட திறந்துவிட மறுக்கும்.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு காவிரி நீரைக் கூட திறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு மண்டியாவில் பாஜகவினர் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். மண்டியா நகரில் உள்ள விஸ்வேஸ்ரய்யா பூங்காவில் 87-வது நாளாக நேற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தை கர்நாடகா விவசாயிகள் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு கர்நாடகா ஒக்கலிகா கவுடா ஜாதி சங்கத்தினர் மற்றும் சில அமைப்புகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தன.

கர்நாடகா விவசாயிகளைப் பொறுத்தவரை காவிரி ஒழுங்காற்று குழு - மேலாண்மை ஆணையம் ஆகியவற்றைக் கலைக்க வேண்டும்; காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி மவுனமாக இருக்கக் கூடாது; பிரதமர் மோடியின் கனத்த மவுனம் கண்டனத்துக்குரியது என்கின்றனர். மேலும் தமிழ்நாட்டுக்கு காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து நீரை திறக்கவே கூடாது என்பதும் இந்த விவசாயிகளின் போராட்டம். அண்மையில் இந்தப் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+