மிசோரமில் கல்குவாரி மலை மொத்தமாக இடிந்து விழுந்தது!15 பீகார் தொழிலாளர்கள் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி மலை ஒன்று அப்படியே மொத்தமாக இடிந்து விழுந்ததில் 15 பீகார் தொழிலாளர்கள் சிக்கினர். மலை சரிந்து விழுந்ததில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 Mizoram: 15 Bihar labourers feared trapped as stone quarry collapses today

மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு உடைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்படுகின்றன. இத்தகைய ஆயுத குழுக்கள், கல்குவாரிகளிடம் தனியாக வரி வசூலித்து அனுமதிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மிசோரம் மாநிலத்திலும் இத்தகைய கல்குவாரிகள் அதிகம் உள்ளன. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பீகார் மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவுக்காக சென்றிருந்தனர்.

அதேநேரத்தில் பல தொழிலாளர்கள் கல்குவாரியின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்குவாரி மலை அப்படியே மொத்தமாக இடிந்து கீழே வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இந்த 15 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக வலைதளங்களில் கல்குவாரி மலை அப்படியே சரிந்து மொத்தமாக கீழே விழும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+