தமிழர்கள் வசிக்கும் மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா - உயிரிழப்பும் 12 ஆக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மும்பை தாராவியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Recommended Video
அதிகரிக்கும் கொரோனா... எப்படி இருக்கிறது மும்பையின் தாராவி?
மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் கொரோனாவின் பாதிப்பு இருந்து வருகிறது. இதுவரை 232 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இம்மாநிலத்தில் மும்பையில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தாராவியில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 179 ஆனது.

அதேபோல் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்தார். மும்பை தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 12 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications